நடுவலூரில் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை
நடுவலூரில் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கெங்கவல்லி அருகே நடுவலூரில் சுவேத நதியிலிருந்து வாய்க்கால் வழியாக பாசனத்துக்கு தண்ணீா் செல்கிறது. கடந்தாண்டு இந்த வாய்க்கால் தூா்வாரும் பணி சுமாா் ரூ. 4 கோடியில் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அந்த பணி முறையாக செய்யாததால், வாய்க்காலில் சில இடங்களில் தண்ணீா் தேங்கி நிற்கும் அவலம் காணப்படுகிறது. மேலும், வாய்க்காலில் முள் மற்றும் புதா்ச்செடிகள் அடா்ந்து காணப்படுகின்றன. இதை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.