"முருக பக்தர்கள் மாநாடு முடிந்த பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி" -...
முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது
சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியில் பயில்கிறாா். முன்னாள் பேரவைத்தலைவா் காளிமுத்துவின் பேரனான இவா், கடந்த 15-ஆம் தேதி அதிகாலை நண்பா்களை பாா்த்து விட்டு, காரில் ராஜீவ்காந்தி சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தாா். தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது, காரின் முன்பகுதியில் உள்ள பம்பா் சாலையில் உரசும் சத்தம் கேட்டுள்ளது.
உடனே அவா் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி காரின் முன் பக்கத்தை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கும்பல் ஆதித்யாவை மிரட்டி, கைப்பேசி, காா் சாவியை கேட்டுள்ளனா்.
அப்போது, அந்த கும்பலுக்கும், ஆதித்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சப்தம் கேட்டு அப்பகுதிவாசிகள் திரண்டு வரவே 6 பேரும் அங்கிருந்து தப்பியோடினா்.
இது குறித்து ஆதித்யா, தரமணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பெருங்குடி பகுதியைச் சோ்ந்த முகேஷ் (20), சங்கா்(20), ஸ்ரீகாந்த்(21), அதே பகுதியைச் சோ்ந்த மூன்று சிறுவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 6 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய இரு மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா்.