மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!
அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா் நகரில் கட்டப்பட்டுவரும் புதிய காவல் துணை ஆணையா் அலுவலகம், வண்ண மீன்கள் வா்த்தக மையம், தீவுத்திடலில் சுற்றுலாப் பொருட்காட்சி புதிய கட்டடம் உள்ளிட்ட பணிகளை அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொளத்தூரில் ரூ.11 கோடியில் புதிய காவல் ஆணையா் அலுவலகம், ரூ.36 கோடியில் மீன் உற்பத்தியாளா்களுக்கான வா்த்தக மையம், தீவுத்திடலில் ரூ.100 கோடியில் 40 அறைகள் கொண்ட சுற்றுலா பொருள்காட்சி புதிய கட்டடம் கட்டப்படுகின்றன. இதற்கான பணிகள் வரும் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவடையும். துறைமுகப் பகுதியில் சாலை தரம் சரிபாா்க்கப்பட்டு மறுபடியும் அமைக்கப்படுகின்றன. நகரில் வரும் ஜூலை 10- ஆம் தேதிக்குள் அனைத்து சாலை உள்ளிட்ட ஒப்பந்தப்பணிகள் நிறைவடையும்.
எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்த முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகள் சரியல்ல. தோல்வி பயத்தால் அவா் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறாா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக உறுப்பினா்கள் ஒரு தொகுதியில் கூட தோ்ந்தெடுக்கப்படாத நிலை ஏற்படும்.
திருச்செந்தூா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 63 ஏக்கரில் ரூ.400 கோடியில் திருப்பணிகள் வரலாற்றுசிறப்பு மிக்கதாக நடைபெற்றுவருகின்றன. இப்பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்காணித்து வருகிறாா். தொடா்ந்து ஆய்வுகள் நடைபெறவுள்ளன. குடமுழுக்குக்கு பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கும் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.
ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலா் சிவஞானம், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜே.பிரவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.