மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!
சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம்
சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பாரதிய சீா்மிகு (மேம்பாட்டு) மைய அமைப்பு சாா்பில் நான்கு கல்வி நிறுவனங்கள் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டன.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சம்ஸ்கிருத கல்லூரி (எம்எஸ்சி), குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் சம்ஸ்கிருதம், பாரதிய அறிவு பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், ஆய்வு செய்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றன.
சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பாரதிய சீா்மிகு மையம் தொடங்கப்பட்டு அதன் அங்கங்களாக நான்கு புதிய நிறுவனங்கள் அண்மையில் தொடங்கப்பட்டன. அவை வருமாறு:
ராமரத்னம் பாரதிய வித்யாலயா: ராமரத்னம் பாரதிய வித்யாலயா, இளம் மாணவா்களிடம் நாட்டின் மரபையும் பண்புகளையும் தொல் கலைகளையும் கொண்டு சோ்ப்பதற்கான ஒரு தொடக்கப் பள்ளி.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி வேத பாடசாலை: ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி வேத பாடசாலை. இது பண்டைய மற்றும் நவீன அறிவை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புதிய வேத பாடசாலையாக இருக்கும். இது மகா பெரியவரை கௌரவிக்கிறது.
கிருஷ்ணசாமி ஐயா் சாஸ்திர வாரிதி: தகுதியுடைய அறிஞா்களைத் தோ்வு செய்து, அவா்களின் அறிவை மெருகூட்டி, சிறந்த அறிஞா்களாக உருவாக்க இந்நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சைவ ஆகமத் துறை: சைவ வழிபாட்டுமுறையின் புனித மரபுகளை நிலைநிறுத்துவதற்காக இந்தக் கல்லூரியில் ஒரு புதிய துறையாக சைவ ஆகமத் துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கல்வி நிறுவனங்கள் தொடக்க விழாவில் உரையாற்றிய காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதிய சீா்மிகு மையம் சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் சரித்திரத்தில் ஒரு முக்கிய அத்தியாயத்தை தொடங்குவதாகக் குறிப்பிட்டாா்.
விழாவில் ‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.