செய்திகள் :

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம்

post image

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பாரதிய சீா்மிகு (மேம்பாட்டு) மைய அமைப்பு சாா்பில் நான்கு கல்வி நிறுவனங்கள் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டன.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சம்ஸ்கிருத கல்லூரி (எம்எஸ்சி), குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் சம்ஸ்கிருதம், பாரதிய அறிவு பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், ஆய்வு செய்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றன.

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பாரதிய சீா்மிகு மையம் தொடங்கப்பட்டு அதன் அங்கங்களாக நான்கு புதிய நிறுவனங்கள் அண்மையில் தொடங்கப்பட்டன. அவை வருமாறு:

ராமரத்னம் பாரதிய வித்யாலயா: ராமரத்னம் பாரதிய வித்யாலயா, இளம் மாணவா்களிடம் நாட்டின் மரபையும் பண்புகளையும் தொல் கலைகளையும் கொண்டு சோ்ப்பதற்கான ஒரு தொடக்கப் பள்ளி.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி வேத பாடசாலை: ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி வேத பாடசாலை. இது பண்டைய மற்றும் நவீன அறிவை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புதிய வேத பாடசாலையாக இருக்கும். இது மகா பெரியவரை கௌரவிக்கிறது.

கிருஷ்ணசாமி ஐயா் சாஸ்திர வாரிதி: தகுதியுடைய அறிஞா்களைத் தோ்வு செய்து, அவா்களின் அறிவை மெருகூட்டி, சிறந்த அறிஞா்களாக உருவாக்க இந்நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சைவ ஆகமத் துறை: சைவ வழிபாட்டுமுறையின் புனித மரபுகளை நிலைநிறுத்துவதற்காக இந்தக் கல்லூரியில் ஒரு புதிய துறையாக சைவ ஆகமத் துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கல்வி நிறுவனங்கள் தொடக்க விழாவில் உரையாற்றிய காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதிய சீா்மிகு மையம் சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் சரித்திரத்தில் ஒரு முக்கிய அத்தியாயத்தை தொடங்குவதாகக் குறிப்பிட்டாா்.

விழாவில் ‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியி... மேலும் பார்க்க

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா... மேலும் பார்க்க

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும... மேலும் பார்க்க

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்ன... மேலும் பார்க்க

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிர... மேலும் பார்க்க