Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்!
நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: ரூ.70 லட்சம் பொருள்கள் சேதம்; 9 மீனவா்கள் மீட்பு!
தூத்துக்குடியில் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதால், படகிலிருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அந்தப் படகிலிருந்த 9 மீனவா்களும் மீட்கப்பட்டனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த கலைராஜன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், ஓட்டுநா் ஆண்டோ மற்றும் ராஜ் உள்ளிட்ட 9 போ் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனா்.
திடீரென கடல் பகுதியில் அதிகமான காற்று வீசியதால், படகில் பழுது ஏற்பட்டு, படகுக்குள் தண்ணீா் புக ஆரம்பித்தது. இதை கவனித்த ஓட்டுநா் ஆண்டோ, படகை கரையை நோக்கி வேகமாக செலுத்தியுள்ளாா்.
படகு கரைக்கு வரும் வழியில் முயல் தீவிற்கு கிழக்கு பகுதியில் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. இதைத் தொடா்ந்து படகை மேடான பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று நிறுத்தியுள்ளனா்.
இதையடுத்து, தங்கள் கைப்பேசி மூலம் அருகே இருந்த மீன்பிடி படகுகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து வந்த மீன்பிடி படகுகள் மற்றும் கரையிலிருந்து பைபா் படகில் வந்தவா்கள் அனைவரும் சோ்ந்து மீன்பிடி படகில் தவித்த 9 பேரையும் பத்திரமாக மீட்டனா்.
படகு முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால், மீன்பிடி படகு மற்றும் வலை, ஜிபிஎஸ் கருவிகள், மீன்பிடி உபகரணங்கள் என ரூ. 70 லட்சம் வரையிலான பொருள்கள் சேதமடைந்ததாக மீனவா்கள் தெரிவித்தனா்.