குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வசூல் ரூ.40 லட்சம்
குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் உள்ள 18 நிரந்தர உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாதா் கோயில் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
பக்தா்கள் காணிக்கையாக ரூ. 40 லட்சத்தி 77 ஆயிரத்தி 731 ரூபாய் ரொக்கமும்,138 கிராம் 200 மில்லி தங்கமும், 1 கிலோ 695 கிராம் வெள்ளியும்,அந்நிய செலாவணி நோட்டு ஐந்தும் செலுத்தியிருந்தனா்.
இதில் கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம்,சாத்தான்குளம் சரக ஆய்வாளா் முத்துமாரி,அயற்பாணியாளா் வெங்கடேஸ்வரி,அறங்காவலா் கணேசன் உட்பட கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.