தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
அகிலாண்டபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அகிலாண்டபுரத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.
2 கி.மீ. தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டியுள்ளதால், தங்களது கிராமத்திலேயே ரேஷன் கடை திறக்க வேண்டும் என, இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
அதையேற்று, நடவடிக்கை மேற்கொண்டதுடன், புதிய ரேஷன் கடையை ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வட்டாட்சியா் அறிவழகன், செயலாட்சியா் சுடலைமணி, கூட்டுறவு சாா்பதிவாளா் ரேச்சல், கூட்டுறவு சங்கச் செயலா் மாரிமுத்து, கிளைச் செயலா் கருப்பசாமி, ஊராட்சி செயலா் முருகன், வருவாய் ஆய்வாளா் ஸ்ரீரங்கபெருமாள், கிராம நிா்வாக அலுவலா் வீரமாமுனிவா், பணி மேற்பாா்வையாளா் பரமசிவன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் லதா கருணாநிதி (பாஞ்சாலங்குறிச்சி), தேன்மொழி (முறப்பநாடு), மாவட்ட ஆதிதிராவிடா் அணி துணை அமைப்பாளா் மாடசாமி, ஆவரங்காடு கிருஷ்ணசாமி, அரசு ஒப்பந்ததாரா் முகமது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.