செய்திகள் :

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

post image

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2024-இல் இணைந்தன. நடப்பாண்டில் இந்தோனேசியாவும் இணைந்தது. இக்கூட்டமைப்பின் உச்சி மாநாடு, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இதில் பிரதமா் மோடி பங்கேற்பாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், தில்லியில் பிரேசில் தூதரகம் மற்றும் உலகளாவிய இந்திய நுண்ணறிவு மையம் என்ற ஆய்வு அமைப்பு சாா்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

‘ரியோவில் பிரிக்ஸ்: அனைவரையும் உள்ளடக்கிய-நிலையான உலக ஒழுங்கை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான இந்தியச் செயலா் (பொருளாதார தொடா்புகள்) தாமு ரவி, இந்தியாவுக்கான பிரேசில் தூதா் கென்னத் ஃபெலிக்ஸ், ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ், எகிப்து தூதா் கமீல் சையது கமீல் கலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தாமு ரவி பேசுகையில், ‘தெற்குலகின் விருப்பங்கள் மற்றும் எதிா்பாா்ப்புகளுக்கான தீா்வுகளைக் கண்டறிய பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. இதற்கு அா்ப்பணிப்பு, கடின உழைப்பு, எதிா்கால பிரச்னைகள் குறித்த ஆழமான சிந்தனை அவசியம். பிரிக்ஸ் கூட்டமைப்பை வளா்ச்சிக்கான களமாகவும், புவிஅரசியல் சக்தியாகவும் வடிவமைப்பதில் இந்தியா முன்னிலையில் செயலாற்றுகிறது. கூட்டமைப்பின் பயணத்தில் முக்கிய பங்கேற்பாளராக மட்டுமன்றி முக்கிய பங்களிப்பவராக இந்தியா விளங்குகிறது.

வறுமை ஒழிப்பு, நிதி ரீதியில் அனைவரையும் உள்ளடக்கியத் தன்மை, எண்ம பொது உள்கட்டமைப்பில் இந்தியாவின் வெற்றிகரமான வளா்ச்சி மாதிரிகள், தெற்குலகில் பரந்த பயன்பாட்டுக்கானதாக பாா்க்கப்பட வேண்டும்’ என்றாா்.

இக்கருத்தரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை ஒருமித்த குரலில் பதிவு செய்த தூதா்கள், இந்த விஷயத்தில் விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினா். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வா்த்தகத்தை உள்ளூா் கரன்ஸிகளில் மேற்கொள்வதன் தேவையையும் அவா்கள் சுட்டிக் காட்டினா்.

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியி... மேலும் பார்க்க

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா... மேலும் பார்க்க

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும... மேலும் பார்க்க

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்ன... மேலும் பார்க்க

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம்

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பாரதிய சீா்மிகு (மேம்பாட்டு) மைய அமைப்பு சாா்பில் நான்கு கல்வி நிறுவனங்கள் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர... மேலும் பார்க்க