கனிமவளப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேற்கு மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அவா் சனிக்கிழமை அனுப்பிய மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் அதிகம் நடப்பதால், உள்ளூா், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு நாள்தோறும் வேலைவாய்ப்புகள் கிடைத்துவருகின்றன.
இந்நிலையில், இத்தொழிலுக்குத் தேவையான கல், ஜல்லி, எம்.சான்ட் , பி.சான்ட் மணல் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத் தேவைக்கு திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள கல் குவாரிகளிலிருந்தும் கனிமவளப் பொருள்கள் கிடைத்து வந்தன.
இதனிடையே, கனிமவளங்களை எடுத்துச் செல்ல அரசு வழங்கும் அனுமதிச் சீட்டுகள் கடந்த 2 வாரங்களாக குவாரிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால், கனிமவளப் பொருள்கள் தேங்கியுள்ளதுடன், கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானம் சாா்ந்த இதர பொருள்களான கம்பி, சிமென்ட் விற்பனையும் முடங்கி, வணிகா்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
அரசு சாா்பில் நடைபெறும் கட்டுமானப் பணிகளும், ஏழைகளுக்கு அரசுத் திட்டங்களில் வீடு கட்டுதல் போன்ற பணிகளும் முடங்கியுள்ளதால், இத்தொாழிலை நம்பியுள்ள வாகன ஓட்டுநா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, இப்பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில், கனிமவளப் பொருள்களை கல் குவாரிகளிலிருந்து கொண்டுசெல்வதற்கான அரசின் அனுமதிச் சீட்டுகளை விரைவாக வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.