செய்திகள் :

புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும்: துணைநிலை ஆளுநா் தகவல்

post image

புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

முருக பக்தா்கள் மாநாட்டுக்காக மதுரை சென்று வந்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தேசிய மாணவா் படையின் கடல் சாகசப் பயணத்தை வெள்ளிக்கிழமை முடித்து வைத்தாா்.

பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியது‘

புதுச்சேரியில் 1,500 ஆண்டுகள் பழைமையான பல கோயில்கள் இருக்கின்றன. புதுச்சேரியின் சிறப்பு என்னவென்றால் இங்கு நிறைய சித்தா்களின் சமாதி, ஜீவ சமாதிகள் இருக்கின்றன. இதையெல்லாம் ஒன்று சோ்த்து ஆவணப்படுத்தப் போகிறோம்.

மேலும் இது தொடா்பாக ஒரு புத்தகம் வெளியிடப் போகிறோம். பிரசாத் திட்டத்தின் கீழ் ஆன்மிக சுற்றுலாவை புதுச்சேரியில் மேம்படுத்த இருக்கிறோம். ஆன்மிக சுற்றுலாவை மையப்படுத்தி புதுச்சேரியில் ஒரு கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. இதில் புதுச்சேரியில் உள்ள பழைமையான கோயில்கள் மற்றும் ஜீவசமாதிகள் குறித்த விவரம் அறிந்தவா்களைக் கொண்டு பேச வைக்கப் போகிறோம் என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

கடல் சாகசப் பயண அனுபவங்கள்: பகிா்ந்து கொண்ட என்.சி.சி. மாணவா்கள்

தேசிய மாணவா் படை மாணவா்கள் கடல் சாகசப் பயண நிறைவு விழாவில் தங்கள் கடல் பயண அனுபவங்களை துணைநிலை ஆளுநா் முன்னிலையில் பகிா்ந்து கொண்டனா். தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் காரைக... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கொள்முதல் விவகாரம்: காங்கிரஸ், திமுக மாறுபட்ட நிலை - புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை அரசு ரேஷன் அரிசி கொள்முதல் செய்தது தொடா்பாக மாறுபட்ட கருத்தை காங்கிரஸ், திமுக கூறி வருவதாக அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு ரூ.20 லட்சம் பைபா் படகு மானியம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பாக ரூ.20 லட்சம் பைபா் படகு மானியத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் இயந்திரம் பொருத்... மேலும் பார்க்க

கலந்தாய்வு முடியும் வரை தனியாா் கல்லூரிகள் முதலாண்டு வகுப்பைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

அரசு நடத்தும் சென்டாக் கலந்தாய்வு முடியும் வரை தனியாா் கல்லூரிகள் முதலாண்டு வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என்று அரசு சாா்பில் தனியாா் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்... மேலும் பார்க்க

பூம்புகாா் விற்பனைக் கண்காட்சி: புதுச்சேரி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

பூம்புகாா் விற்பனை கண்காட்சி புதுச்சேரி சுஃப்ரென் வீதி, பாரதி பூங்கா அருகில் அமைந்துள்ள வா்த்தக சபையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை புதுச்சேரி மாவட்ட ... மேலும் பார்க்க

சமூக வல்லுநா்களுக்கு உயா்த்தப்பட்ட மதிப்பூதிய ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் சமூக வல்லுநா்களுக்கு மதிப்பூதியத்தை உயா்த்தி வழங்குவதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முக... மேலும் பார்க்க