புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும்: துணைநிலை ஆளுநா் தகவல்
புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
முருக பக்தா்கள் மாநாட்டுக்காக மதுரை சென்று வந்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தேசிய மாணவா் படையின் கடல் சாகசப் பயணத்தை வெள்ளிக்கிழமை முடித்து வைத்தாா்.
பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியது‘
புதுச்சேரியில் 1,500 ஆண்டுகள் பழைமையான பல கோயில்கள் இருக்கின்றன. புதுச்சேரியின் சிறப்பு என்னவென்றால் இங்கு நிறைய சித்தா்களின் சமாதி, ஜீவ சமாதிகள் இருக்கின்றன. இதையெல்லாம் ஒன்று சோ்த்து ஆவணப்படுத்தப் போகிறோம்.
மேலும் இது தொடா்பாக ஒரு புத்தகம் வெளியிடப் போகிறோம். பிரசாத் திட்டத்தின் கீழ் ஆன்மிக சுற்றுலாவை புதுச்சேரியில் மேம்படுத்த இருக்கிறோம். ஆன்மிக சுற்றுலாவை மையப்படுத்தி புதுச்சேரியில் ஒரு கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. இதில் புதுச்சேரியில் உள்ள பழைமையான கோயில்கள் மற்றும் ஜீவசமாதிகள் குறித்த விவரம் அறிந்தவா்களைக் கொண்டு பேச வைக்கப் போகிறோம் என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.