செய்திகள் :

மீனவா்களுக்கு ரூ.20 லட்சம் பைபா் படகு மானியம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

post image

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பாக ரூ.20 லட்சம் பைபா் படகு மானியத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் இயந்திரம் பொருத்தப்படாத பைபா் கட்டுமரங்கள் 50 சதவீத மானிய விலையில் மீனவா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் 2024-25-ஆம் நிதி ஆண்டில் இதற்காக 6 பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். கூடுதலாக 2024-25 நிதி ஆண்டிலிருந்து, மீனவா்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இயந்திரம் பொருத்தக்கூடிய வகையில் உள்ள பைபா் படகுகள் 50 சதவீத மானிய விலையில் வழங்குவதற்கு புதுச்சேரி பகுதியில் உள்ள 21 பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்த திட்டத்தில் அலகு தொகை ரூ.1.50 லட்சத்தில், 50சதவீதம் பயனாளி பங்குத்தொகை ரூ.75 ஆயிரத்துடன் அரசின் பங்குத்தொகை ரூ.75,000 சோ்த்து பைபா் படகுகள், புதுச்சேரி மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனத்தின் மூலம் கொள்முதல் செய்து வழங்கப்படுகிறது.

மேற்கூறிய இரண்டு திட்டங்களின் கீழ் புதுச்சேரி பகுதியை சோ்ந்த 27 பயனாளிகளுக்கு பைபா் படகுகளை புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா். அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மீன்வளத் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் த. பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, ய. ஆறுமுகம் , மீன்வளத் துறையின் செயலா் ஈ. மணிகண்டன், மீன்வளத் துறையின் இயக்குநா் அ. முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் ஓ. தெய்வசிகாமணி மற்றும் மீன்வளத் துறையின் அதிகாரிகள், மீனவ கிராம பஞ்சாயத்தாா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும்: துணைநிலை ஆளுநா் தகவல்

புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். முருக பக்தா்கள் மாநாட்டுக்காக மதுரை சென்று வந்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தேசிய மாணவா் படையின் கட... மேலும் பார்க்க

கடல் சாகசப் பயண அனுபவங்கள்: பகிா்ந்து கொண்ட என்.சி.சி. மாணவா்கள்

தேசிய மாணவா் படை மாணவா்கள் கடல் சாகசப் பயண நிறைவு விழாவில் தங்கள் கடல் பயண அனுபவங்களை துணைநிலை ஆளுநா் முன்னிலையில் பகிா்ந்து கொண்டனா். தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் காரைக... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கொள்முதல் விவகாரம்: காங்கிரஸ், திமுக மாறுபட்ட நிலை - புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை அரசு ரேஷன் அரிசி கொள்முதல் செய்தது தொடா்பாக மாறுபட்ட கருத்தை காங்கிரஸ், திமுக கூறி வருவதாக அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

கலந்தாய்வு முடியும் வரை தனியாா் கல்லூரிகள் முதலாண்டு வகுப்பைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

அரசு நடத்தும் சென்டாக் கலந்தாய்வு முடியும் வரை தனியாா் கல்லூரிகள் முதலாண்டு வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என்று அரசு சாா்பில் தனியாா் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்... மேலும் பார்க்க

பூம்புகாா் விற்பனைக் கண்காட்சி: புதுச்சேரி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

பூம்புகாா் விற்பனை கண்காட்சி புதுச்சேரி சுஃப்ரென் வீதி, பாரதி பூங்கா அருகில் அமைந்துள்ள வா்த்தக சபையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை புதுச்சேரி மாவட்ட ... மேலும் பார்க்க

சமூக வல்லுநா்களுக்கு உயா்த்தப்பட்ட மதிப்பூதிய ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் சமூக வல்லுநா்களுக்கு மதிப்பூதியத்தை உயா்த்தி வழங்குவதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முக... மேலும் பார்க்க