செய்திகள் :

வால்பாறை அருகே சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

post image

வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாய் கண் முன்னே, சிறுத்தை வெள்ளிக்கிழமை மாலை கவ்விச் சென்ற நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

6 வயது சிறுமியை தாய் கண்முன்னே சிறுத்தை கவ்விச்சென்ற நிலையில், நேற்று மாலை முதல் ட்ரோன் உதவியுடன் தீவிர தேடுதல் பணியில் காவல் துறையினரும் வனத்துறையினரும் ஈடுபட்டு வந்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று காலை, சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், இங்கு பணியாற்றும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ் என்பவரது மகள் ரோஷினி (6) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, தேயிலைத் தோட்டத்தில் செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தை, ரோஷினியைத் தாக்கி கவ்விச் சென்றது.

இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் கூச்சலிட்டதுடன், சிறுத்தையைப் பின் தொடா்ந்து சென்றனா். ஆனால், பாதி வழியிலேயே சிறுமியுடன் சிறுத்தை மாயமானது. இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினருடன் அப்பகுதி மக்கள் இணைந்து ரோஷினியைத் தேடினர்.

இரவு முழுக்க தேடும் பணி நடைபெற்றும் சிறுமி கிடைக்காத நிலையில், சனிக்கிழமை காலை, சிறுமியின் சடலம் கிடைத்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர்: தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!

இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தமிழ்நாடு மு... மேலும் பார்க்க

வள்ளுவம் போற்றுதும்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் ரூ.80 கோடியில் புனர... மேலும் பார்க்க

திமுகவில் புகைச்சல்; தமிழ்நாட்டை அமித் ஷா பார்த்துக்கொள்வார்! - நயினார் நாகேந்திரன்

திமுகவில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் பாஜக... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் கிடைக்கும்!

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு ஆங்கிலம் பயமல்ல; ஆனால்..! - அன்பில் மகேஸ் கருத்து

அமித் ஷாவுக்கு ஆங்கிலம் பற்றிய பயமல்ல, அதனால் வளர்ச்சி, சமத்துவம் ஏற்படுகிறதே என பயம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். சமீபத்தில் தில்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

என் குழந்தைகள் யோகா, சிலம்பம் கற்கிறார்கள்; தாய்மொழியில் பேசுகிறேன்: நமீதா

ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான், ஆனால் அதற்கு முன் தாய்மொழிதான் முக்கியம் என வேலூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நமீதா கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியா... மேலும் பார்க்க