செய்திகள் :

நீதிபதி வீட்டில் சிக்கிய பணம்; 'அமித் ஷாவிடம் முதலில் தகவலை சொன்ன டெல்லி காவல்துறை’ - வெளியான தகவல்

post image

கடந்த மார்ச் மாதம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீயணைப்பு முடிந்ததும், தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டில் கட்டு கட்டான பாதி எரிந்த பணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து தீயணைப்பு வீரர்களால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சம்பவம் நடந்த சமயத்தில், யஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லை. அதற்கடுத்த நாள், டெல்லி திரும்பிய யஷ்வந்த் வர்மா, 'பணம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட அறை அவரது நீதிபதி குடியிருப்பில் இருக்கும் அனைவரும் பயன்படுத்தப்படும் ஒரு அறை. அது பயன்படுத்ததாத நாற்காலிகள், பாட்டில்கள், பாத்திரங்கள், தோட்டக் கருவிகள் ஆகியவற்றை போட்டு வைக்கும் அறை.

அமித்ஷா
அமித்ஷா

அந்த அறைக்கு குடியிருப்பில் இருக்கும் அனைவரும் வந்துப்போக முடியும். அது என்னுடைய வீட்டின் அறை அல்ல" என்று டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு விளக்கக் கடிதம் கொடுத்தார்.

இருந்தும், அவரை அவரது சொந்த மாநிலமான அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணிமாற்றல் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், 'ஊழல் செய்தவரை எங்கள் நீதிமன்றத்திற்கு மாற்றுவதா?' என்று இந்த முடிவிற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தது.

இன்னொரு பக்கம், 'அந்த அறை யஷ்வந்த் வர்மா வீட்டின் அறை தான்' என்று விசாரணையில் உறுதியானது. மேலும், பாதி எரிந்த பணம் உடனடியாக அகற்றப்பட்டது, யஷ்வந்த் வர்மாவின் மகள் முன்னுக்கு பின் முரணான தகவல் என அனைத்துமே யஷ்வந்த் வர்மாவிற்கு எதிராக இருக்கிறது.

இவரை உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து நீக்க பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதி எரிந்த பணக் கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதும், இது குறித்த தகவலை சில மணிநேரத்திலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் டெல்லி காவல்துறை அணையர் சஞ்சய் அரோரா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் எடை இயந்திரம்: ரேஷன் கடையில் தாமதமாகும் பொருள் விநியோகம்; மக்கள் கோபம் - கவனிக்குமா அரசு?

அந்தக் காலம், இந்தக் காலம்... எந்தக் காலமாக இருந்தாலும், ரேஷன் கடை என்றதும் நம் கண்முன்னே வந்து நிற்பது, 'வரிசை... கூட்டம்'. 'அதிக வெயில் இல்லாத நேரத்திலும், கூட்டம் அதிகமாக இல்லாமல் இருக்கும் நேரத்தி... மேலும் பார்க்க

மதிமுக: "வேறு கட்சியுடன் சேரும் அவசியம் தற்போது இல்லை" - திமுக கூட்டணி குறித்து வைகோ சொல்வது என்ன?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமித்ஷாவின் உளறல்களுக்கு எல்லையே இல்லை. ஆங்கிலம் உலக மொழி. ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுக... மேலும் பார்க்க

'பொறுப்பான பேச்சுவார்த்தை; அடுத்த வாரம் சுமூக முடிவு!' - ட்ரம்ப் பதிவு - இறங்கி வருகிறதா ஹார்வார்டு?

'அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக உங்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களின் தகவல்களை அரசிடம் கொடுங்கள்' என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்திடன் கேட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு. ... மேலும் பார்க்க

`திமுக மீது மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்; 2026 தேர்தலில் பரிசு...' - எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து நான் ஏற்கெனவே வி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வாங்கும் சீனாவின் 'J-35 ஸ்டெல்த் ஃபைட்டர்' - இந்தியாவுக்கான அச்சுறுத்தலா?

J-35 - இது சீனாவின் இரண்டாவது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் ஃபைட்டர் விமானம் ஆகும். இது கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. J-35 ஸ்டெல்த் ஃபைட்டர்... ஸ்டெல்த் ஃபைட்டர் என்றாலே, அதை ரேடார், சென்சார்... மேலும் பார்க்க