செய்திகள் :

`திமுக மீது மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்; 2026 தேர்தலில் பரிசு...' - எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

post image

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து நான் ஏற்கெனவே விளக்கம் கொடுத்து விட்டேன்.

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார். அதற்காக அதிமுக ஆட்சியில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து நேற்றே விளக்கம் அளித்துவிட்டோம்.

ஒவ்வொரு  அமைப்பும் அவரவர் விரும்பும் கடவுள்களை வழிபடுவது ஜனநாயக உரிமை. அந்த அடிப்படையில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என அமித் ஷா சொல்லியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து.

அமித்ஷா
அமித்ஷா

அதேநேரத்தில் அனைவருக்கும் தாய் மொழி முக்கியம் என்பதையும் அவர் கூறியுள்ளார். தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் பேசியுள்ளார்.

திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் மறைப்பதற்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தும், அவதூறு தகவல்ககளை பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

திமுக
திமுக

இதற்கு எல்லாம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த தண்டனையை அவர்களுக்கு பரிசாக வழங்குவார்கள். யோகா உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. பிரதமர் யோகாவை முன்னெடுத்து செல்வதற்கு என் வாழ்த்துகள்.” என்றார்.

ஈரான் vs இஸ்ரேல்: 'நம் குரலை இழந்துவிட்டோமா?' - இந்திய அரசைக் கேள்வி கேட்கும் சோனியா காந்தி!

ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் வலுபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா மௌனமாக இருப்பது வெளியுறவு செயல்பாடுகளின் தவறைக் காட்டுவதாகவும், இந்தியாவின் தார்மீக மற்றும் போர்த்திறம்சார்ந்த மரபுக்கு முட... மேலும் பார்க்க

ப்ளூடூத் எடை இயந்திரம்: ரேஷன் கடையில் தாமதமாகும் பொருள் விநியோகம்; மக்கள் கோபம் - கவனிக்குமா அரசு?

அந்தக் காலம், இந்தக் காலம்... எந்தக் காலமாக இருந்தாலும், ரேஷன் கடை என்றதும் நம் கண்முன்னே வந்து நிற்பது, 'வரிசை... கூட்டம்'. 'அதிக வெயில் இல்லாத நேரத்திலும், கூட்டம் அதிகமாக இல்லாமல் இருக்கும் நேரத்தி... மேலும் பார்க்க

மதிமுக: "வேறு கட்சியுடன் சேரும் அவசியம் தற்போது இல்லை" - திமுக கூட்டணி குறித்து வைகோ சொல்வது என்ன?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமித்ஷாவின் உளறல்களுக்கு எல்லையே இல்லை. ஆங்கிலம் உலக மொழி. ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுக... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் சிக்கிய பணம்; 'அமித் ஷாவிடம் முதலில் தகவலை சொன்ன டெல்லி காவல்துறை’ - வெளியான தகவல்

கடந்த மார்ச் மாதம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயணைப்பு முடிந்ததும், தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டில் கட்டு கட்டான பாதி எரிந்த பணத்தைக் கண்டுபி... மேலும் பார்க்க

'பொறுப்பான பேச்சுவார்த்தை; அடுத்த வாரம் சுமூக முடிவு!' - ட்ரம்ப் பதிவு - இறங்கி வருகிறதா ஹார்வார்டு?

'அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக உங்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களின் தகவல்களை அரசிடம் கொடுங்கள்' என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்திடன் கேட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு. ... மேலும் பார்க்க