செய்திகள் :

டெல்லி: மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக அலறிய பெண்களின் வீடியோ வைரல்; DMRC-யின் விளக்கம் என்ன?

post image

டெல்லி மெட்ரோவின் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் அதனை கண்டு பயணிகள் அலறியடித்து சத்தம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

மெட்ரோ ரயில் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்தாக மாறியுள்ளது. டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் இந்த போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது டெல்லி மெட்ரோ ரயிலின் வீடியோ ஏதோ ஒரு காரணம் கொண்டு இணையத்தில் வைரலாகும்.

இந்த நிலையில் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் இதனைக் கண்டு பயணிகள் சத்தமிடுவதை குறிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

சம்பவம் நடந்த மெட்ரோ வழித்தடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததையடுத்து, வைரலானது.

மெட்ரோ வீடியோ வைரலானதை அடுத்து டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்(DMRC) இதனை ஆய்வு செய்தபோது அங்கு ஒரு குட்டி பல்லி என்று கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

DMRC-யின் முதன்மை நிர்வாக இயக்குநர் அனுஜ் தயாள் இதுகுறித்து கூறுகையில் ”வைரலான வீடியோவில் பாம்பு காணப்படவில்லை இருப்பினும் பெண்கள் பெட்டியில் பாம்பு காணப்பட்டதாக எங்களுக்கு ஒரு எச்சரிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது

அக்ஷர்தாம் மெட்ரோ நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டு ஆய்வுக்காக டிப்போவிற்கு அனுப்பப்பட்டது.

சம்பந்தப்பட்ட குழு ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தபோது அங்கு எந்த பாம்பும் கண்டுபிடிக்கப்படவில்லை மாறாக ஆய்வின் போது ஒரு குட்டி பல்லி மட்டும் இருந்தது” என்று அவர் கூறினார்.

நடுவானில் மோசமான உடல்நிலை; சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்கு தொடர்ந்த மருத்துவர் - என்ன நடந்தது?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர், விமானத்தில் பயணித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளார்.தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின் படி, நியூயா... மேலும் பார்க்க

2006-ல் நிலத்தை விற்ற தந்தை; நில உரிமையாளரிடம் 19 ஆண்டுபின் இழப்பீடு கோரும் மகள் - என்ன நடந்தது?

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 2006 ஆம் ஆண்டு தனது நிலத்தை ஒருவருக்கு பெற்றுள்ளார். விற்றவரின் மகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இரண்டு தசாப்தங்களுக்கு ம... மேலும் பார்க்க

மகனுக்கு பெண்பார்க்க சென்றபோது நெருக்கம் - வருங்கால மருமகளை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் இருக்க... மேலும் பார்க்க

2025 -1941: ஒரே நாள்காட்டியை கொண்டிருக்கும் ஆண்டுகள்- உலகப்போர் நடந்த ஆண்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

2025 ஆம் ஆண்டின் நாள்காட்டி 1941 ஆம் ஆண்டின் நாள்காட்டியோடு அப்படியே ஒத்து இருக்கிறது. அதாவது இரண்டு ஆண்டுகளிலும் தேதிகள், கிழமைகள் ஒன்றாகவே வருகின்றன. 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி 1941 ஆம் ஆண்டு போலவே உ... மேலும் பார்க்க

Euro Millions: இதுவரை யாரும் பெறாத லாட்டரி ஜாக்பாட்டை வென்ற நபர்; எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா?

அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் 208 மில்லியன் பவுண்டுகள் (தோராயமாக ரூபாய் 2,120 கோடி) லாட்டரி டிக்கெட்டில் வென்றுள்ளார். இது ஐரோப்பாவில் இதுவரை வென்ற மிகப்பெரிய லாட்டரி பரிசாக கூறப்படுகிறது. ஐரிஷ் என்ற நபர்... மேலும் பார்க்க

பிறந்து 10 நாளில் தனித்தனியாக தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள்; 17 ஆண்டுகள் கழித்து இணைந்ததெப்படி?

பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் வெவ்வேறு குடும்பங்களுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள் தாங்கள் சகோதரிகள் என அறியாமலே நெருங்கிய நண்பர்கள் ஆன நெகிழ்ச்சி சம்பவம், சீனாவில் நிகழ்ந்துள்ளது.ஸாங் குவோஸின... மேலும் பார்க்க