செய்திகள் :

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

post image

மதுரை: எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளாா்.

மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்களை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களுடன் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

கீழடி அகழாய்வு எனும் பிள்ளையை பெற்றது அதிமுக

அதிமுக ஆட்சியில் இருந்துதான் தமிழகத்தில் 39 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது, கீழடி அகழாய்வு எனும் பிள்ளையை பெற்றது அதிமுக, அந்த பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டு விழா நடத்துகிறது, அதிமுக ஆட்சி கீழடி அகழாய்வுக்கு முக்கியத்துவம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அளித்தது. தற்போது, திமுக ஆட்சியில் நடைபெறும் பிரச்னைகளை மடைமாற்றுவதற்காக மத்திய அரசு கீழடி அகழாய்வு குறித்து ஆதாரம் கேட்டதை பெரிதாக பேசி வருகிறார்கள். கீழடி அகழாய்வை பொதுவாக பேசிவிட முடியாது, அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்படும் அகழாய்வை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது.

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

அதிகாரம், ஆணவத்தின் உச்சத்தில் திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செயல்படுகிறார், டி.ஆர்.பி. ராஜாவின் செயல்பாடுகளை சட்ட ரீதியாக சந்திப்போம், அதிமுகவை ஒரு முறை விமர்சித்தால் நாங்கள் 100 முறை விமர்சிப்போம். எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அரசியல் களத்தில் எடப்பாடி பழனிசாமியை குறைத்து மதிப்பிட்டவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள் என்றார்.

திமுக அரசு ஏன் குதிக்கிகிறது

மேலும், கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்பது நடைமுறையில் உள்ளது. அகழாய்வில் விளக்கம் கேட்பதும், கொடுப்பதும் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். அதனை திமுக வெட்ட வெளிச்சமாக்கி விளம்பரம் தேடுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் எங்களிடமும் விளக்கம் கேட்டு இருக்கிறார்கள். அப்போதைய செயலாளர் உதயசந்திரன் விளக்கங்களை கொடுத்து இருக்கிறார். அகழாய்வு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்பதில் திமுக அரசு ஏன் குதிக்கிகிறது என உதயகுமார் கூறினார்.

சிற்றுந்துகள் திட்டம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு!

ஹாக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா!

ஆண்ட்வெர்ப்[பெல்ஜியம்] : ஐரோப்பாவில் நடைபெற்றுவரும் ஹாக்கி புரோ லீக் தொடரில் பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1 - 5 என்ற புள்ளிக்கணக்கில் இன்று (ஜூன் 21) தோல்வி அடைந்தது.இந்திய அண... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் திட்டம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள சிற்றுந்துகள் திட்டத்தால், 3,103 வழித்தடங்களில் உள்ள இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்ல... மேலும் பார்க்க

தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி: தமிழிசை

வேலூர்: தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கா்நாடக மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுத... மேலும் பார்க்க

விருதுநகரில் கொடூர கொலை: 3 பேர் வெட்டிக் கொலை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொலை செய்த கணவர் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவ... மேலும் பார்க்க

தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே சிறுத்தை இழுத்துச் சென்ற நான்கு வயது சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை அருகே உ... மேலும் பார்க்க