செய்திகள் :

சிற்றுந்துகள் திட்டம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு!

post image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள சிற்றுந்துகள் திட்டத்தால், 3,103 வழித்தடங்களில் உள்ள இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இத்திட்டம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்கள். இந்தியாவில் பேருந்து வசதிகளில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு எனும் பெருமை அதன் மூலம் ஏற்பட்டது.

பேருந்து வசதிகள் கிடைக்காத குக்கிராமப் பகுதி மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்கத்தக்க வகையில் சிற்றுந்துகள் திட்டம் 1997 இல் கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டது. சிற்றுந்துகள் திட்டம் தொடர்பான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 22.7.2024 இல் தமிழ்நாடு முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் தொழில் சார்ந்த பல்வேறு தரப்பினர் தெரிவித்த ஆலோசனைகள் அடிப்படையில் புதிய விரிவான சிற்றுந்துகள் திட்டம் 2024 குறித்து ஜனவரி 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்ட அறிக்கையில் மறுபடியும் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, மே 28 ஆம் தேதி புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 25 கி.மீ. தூரத்திற்கு சிற்றுந்துகள் இயக்கப்படும் என்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று மக்களை இறக்கிவிட ஏதுவாக மேலும் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சிற்றுந்துகளை இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டது. இதன்படி, 3,103 வழித்தடங்களில் உள்ள 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை ஜூன் 16 ஆம் தேதி தஞ்சாவூரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதுவரை, பேருந்துகளை தங்கள் கிராமத்தில் காணாத மக்கள் எல்லாம் கண்டு மகிழ்ந்து பரவசம் அடையும் வகையில் சிற்றுந்துகள் கிராமப்புறங்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. இந்த சிற்றுந்துகள் தங்களுடைய கிராமத்திற்கு வந்ததும் மூதாட்டி ஒருவர் தரையில் விழுந்து தலைவணங்கி பேருந்தை வரவேற்றார். வேறு சிலர் பேருந்து வந்த வழித்தடத்தில் கற்பூரம் ஏற்றி மகிழ்ந்து வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

திருத்தணியிலிருந்து தும்பிக்குளத்திற்குப் புதிதாக இயக்கப்பட்ட சிற்றுந்தில் பயணம் செய்த ஒரு பெண், “நான் தும்பிக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். விவசாயக் கூலி தொழிலாளியான நான், நாள்தோறும் வேலைக்குச் செல்லும்போது பஸ் வசதி இல்லாததால், நடந்தே வேலைக்குச் சென்று அவதிப்பட்டு வந்தேன். தற்போது சிற்றுந்து சேவை தொடங்கியிருப்பதால், இதில், பாதுகாப்பாக வேலைக்குச் சென்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் கிராமத்திற்கு சிற்றுந்துகள் திட்டத்தைச் செயல்படுத்திய முதல்வருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பவானி என்னும் மாணவி தெரிவிக்கையில் “திருத்தணியில் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கிறேன். நான் பள்ளி செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால், நாள்தோறும் பள்ளிக்குச் செல்வதற்குச் சிரமம் ஏற்பட்டது. தற்போது எங்கள் ஊருக்கு சிற்றுந்து வருவதால், நான் பள்ளி செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து நெல்லிக்குப்பம் வரை செல்லும் சிற்றுந்தில் பயணம் செய்த கன்னிவாக்கத்தைச் சேர்ந்த வரதராஜன், “எங்கள் ஊருக்கு போக்குவரத்து வசதி கிடையாது. நாங்கள் இரு சக்கர வாகனங்களிலோ, ஆட்டோ பிடித்தோ அதிக செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இதுவரை இருந்தோம். தற்போது எங்கள் கிராமத்திற்கு சிற்றுந்து வருவதால், எங்கள் சிரமம் குறைந்து, செலவினம் குறைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இத்திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ள முதல்வருக்கு எங்களுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள இந்த சிற்றுந்து திட்டத்தால், இவர்களைப் போல ஏறத்தாழ 1 கோடி மக்கள் சிற்றுந்தில் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷாவுக்கு ஆங்கிலம் பயமல்ல; ஆனால்..! - அன்பில் மகேஸ் கருத்து

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

மதுரை: எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளாா்.மதுரை காந்தி ம... மேலும் பார்க்க

தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி: தமிழிசை

வேலூர்: தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கா்நாடக மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுத... மேலும் பார்க்க

விருதுநகரில் கொடூர கொலை: 3 பேர் வெட்டிக் கொலை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொலை செய்த கணவர் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவ... மேலும் பார்க்க

தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே சிறுத்தை இழுத்துச் சென்ற நான்கு வயது சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை அருகே உ... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது... மேலும் பார்க்க