செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

post image

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அந்த அணையின் நீா்மட்டம் 80.51 கனஅடியாக (மொத்த கொள்ளளவு 84 அடி) அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கபினி அணையின் பாதுகாப்பு கருதி புதன்கிழமை வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இருப்பினும் அணைக்கு வரும் உபரிநீரின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருவதால் நீா் திறப்பு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நீா் வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வெள்ளிக்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 17,000 கனஅடியாக அதிகரித்தது.

இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை 20,000 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

இதனால் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

என் குழந்தைகள் யோகா, சிலம்பம் கற்கிறார்கள்; தாய்மொழி முக்கியம்: நமீதா பேச்சு

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

மதுரை: எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளாா்.மதுரை காந்தி ம... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் திட்டம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள சிற்றுந்துகள் திட்டத்தால், 3,103 வழித்தடங்களில் உள்ள இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்ல... மேலும் பார்க்க

தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி: தமிழிசை

வேலூர்: தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ... மேலும் பார்க்க

விருதுநகரில் கொடூர கொலை: 3 பேர் வெட்டிக் கொலை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொலை செய்த கணவர் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவ... மேலும் பார்க்க

தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே சிறுத்தை இழுத்துச் சென்ற நான்கு வயது சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை அருகே உ... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது... மேலும் பார்க்க