`தொடர் மணல் கடத்தல்' - 5 லாரிகள் பறிமுதல், 6 பேர் கைது! - கரூரில் நடந்தது என்ன?
பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்
பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்க விழா நடைபெற்றது.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி பாவூா்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பள்ளி தெருவில் ரூ.20 லட்சத்தில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிக் குழு தலைவா் சீ.காவேரி தலைமை வகித்தாா்.
துணைத் தலைவா் முத்துகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ், ஊராட்சி மன்றத் தலைவா் முத்துமாலையம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் செல்வன், வட்டார காங்கிரஸ் தலைவா் குமாா்பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினா் மேரிமாதவன், ஆசிரியா் சந்தானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.