Iran Vs Israel: ``அமெரிக்கா நம்பகத்தன்மையை இழந்துவிட்டது" - ஈரானுக்கு ஆதரவாக ஐ.ந...
`தொடர் மணல் கடத்தல்' - 5 லாரிகள் பறிமுதல், 6 பேர் கைது! - கரூரில் நடந்தது என்ன?
கரூர் அருகே உள்ள வெள்ளியணை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கிறது உப்பிடமங்கலம். இந்த பேரூராட்சியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நவலடி மணல் சலிப்பகத்தில் சட்ட விரோதமாக கட்டளை மற்றும் வீரராக்கியம் பகுதிகளில் இருந்து ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்வதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
இந்த ரகசிய தகவல் அடிப்படையில் பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளர் முத்துக்குமார், வெள்ளியணை காவல் உதவி ஆய்வாளர் ரூபினி மற்றும் தனிப்படையினர் மேற்படி இடத்தில் சோதனை செய்த போது, அங்கிருந்த 5 லாரிகளில், 3 லாரியில் 9 யூனிட் மணலுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, மணல் சலிப்பகத்தில் திடீர் சோதனை நடைபெற்றது. போலீஸாரின் விசாரணையில், திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பிரகாஷ், பாரதி, சதீஷ்குமார் என்கிற சோடா சதீஷ், மற்றும் ஸ்ரீ நவலடி மணல் சலிப்பக உரிமையாளர் தயாநிதி உள்ளிட்டோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மாயனூர் பிரசன்னா என்ற லாரி உரிமையாளர் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள கட்டளை மற்றும் வீரராக்கியம் பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் மற்றும் பிக்கப் வாகனங்களில் இருந்து மணலை சலிப்பகத்திற்கு கொண்டு வந்து, அங்கிருந்து லாரிகளில் சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து, மேற்படி 5 நபர்களை கைது செய்தும், மணலுடன் இருந்த லாரிகள் மற்றும் காலியாக இருந்த லாரிகளையும் போலீஸார் கைப்பற்றினர். தலைமுறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
இதில் தலைமறைவாக உள்ள பிரசன்னா என்பவர் மீது மணல் கடத்திய குற்றத்திற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 வழக்குகளும், கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலையத்தில் 1 வழக்கும், புல்பேண்ட் சதீஸ்குமார் என்பவருக்கு திருப்பூர் மாவட்டம், அவினாசி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், நவலடி மணல் சலிப்பக உரிமையாளர் தயாநிதி என்பவர் மீது வெள்ளியணை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.