செய்திகள் :

வால்பாறை 4 வயது குழந்தையை தூக்கி சென்ற சிறுத்தை; தேடுதல் பணியில் அதிர்ச்சி... கண்ணீரில் குடும்பம்

post image

கோவை மாவட்டம், வால்பாறை மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளிகள் பணியாற்றி வருகிறார்கள். அண்மை காலமாகவே அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளிகள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள்.

வால்பாறை

இவர்கள் பெரும்பாலும் எஸ்டேட்டுக்கு சொந்தமான லைன் வீடுகளில் தான் தங்கி வருகிறார்கள். இந்தப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை,  கரடி, காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும்.

இதனால் மனித – வனவிலங்கு முரண் அதிகளவு நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதி பச்சைமலை எஸ்டேட்டில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ரோஷினி (4 வயது) நேற்று இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

ரோஷினி

அப்போது தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை கண் இமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்து குழந்தையை தூக்கிச் சென்றது. குழந்தையின் தாய் அலறியதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து தேடினர்.

மேலும் வனத்துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து குழந்தையை தேடினார்கள். வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேடுதல் பணியில் சவால் ஏற்பட்டுள்ளது. இதனிடையே குழந்தையின் தலைப் பகுதி கண்டறியப்பட்டுள்ளது.

தேடுதல் பணி

டிரோன் கேமரா மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சிறுமியின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல வால்பாறையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்களால் வால்பாறை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவுவிளை பகுதியை சேர்ந்த துரைசாமி - தனலெட்சுமி தம்பதியரின் மகன் தனுஷ்(22). இவர் குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதிலுள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்: இந்து முன்னணிக்கு போலீஸ் ஆதரவு? சிபிஎம் போராட்டம்; பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக மத்திய மாநில அரசுகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி பிரசாரம் நடந்தது.இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின... மேலும் பார்க்க

டயப்பரில் மலம்: 8 மாத குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற தாய்; நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி!

டயப்பரை அழுக்காக்கியதால் கொதிக்கும் நீரில் குழந்தையைப் போட்டு கொன்ற பெண்ணை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்தவர் ஜடோரியா ரெனே கிளீமன்ஸ் (21). இவருக்கு 8 மாத ஆண் கு... மேலும் பார்க்க

கரூர்: காதல் திருமணம் செய்த இளஞ்ஜோடி; வீட்டுக் காவலில் மணமகன்; மணப்பெண் கண்ணீர்; பின்னணி என்ன?

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சதயவர்த்தினி (வயது: 19). இவரும், தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது: 21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து... மேலும் பார்க்க

தென்காசி: விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீர் மரணம்; நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம் வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் மற்றும் புனிதா தம்பதி. இவர்களுடைய இரண்டரை வயது ஆண் குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு தனது தாயுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.அப்போது திட... மேலும் பார்க்க

தென்காசி: வீட்டில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24 வார்டுகள் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இந்த 2025-26 நிதியாண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக நகராட்சி வசூல் பணி மேற்பார்வையாளர் ... மேலும் பார்க்க