செய்திகள் :

தட்கல் டிக்கெட் - ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம்

post image

விரைவு ரயிலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் மூலம் ஓடிபி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்கும்படி இந்திய ரயில்வே அறிவுறுத்தியிருக்கிறது.

விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய தற்போது 60 நாள்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் பயணம் செய்யும் நாளுக்கு ஒருநாள் முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.

தட்கல் டிக்கெட் என்றால், ஒரு விரைவு ரயிலில் பயணம் செய்ய, அந்த விரைவு ரயில் புறப்படும் நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு ஏசி பெட்டிகளுக்கான முன்பதிவும், காலை 11 மணிக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும் முன்பதிவு தொடங்கும்.

தட்கல் டிக்கெட் முன்பதிவு இருக்கும் முறைகேடுகளைத் தடுகக் சிலக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் ஐஆர்சிடிசி கணக்குடன் பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது. அதன் மூலம், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஆதார் அட்டையில் இருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்பட்டு, அதனை உள்ளிட்டால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்த நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எனவே, ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆதார் சரிபார்ப்பு (aadhaar verification) செய்யப்பட்டவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் அந்தப் பணிகள் தொடங்கியுள்ளன.

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

1. ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவுக்கான கணக்கு வைத்திருக்கும் பயனர்கள், ஐஆர்சிடிசி இணையதளத்துக்குச் சென்று லாக் இன் செய்ய வேண்டும்.

2. அதில் எனது கணக்கு (மை அக்கவுண்ட்) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

3. அதில், பயனர்களின் ஆதார் எண், பெயர் உள்ளிட்ட விவரங்களுக்கான படிவம் இருக்கும்.

4. உரிய விவரங்களை அளித்து ஓடிபி பெற்று அதனை உள்ளிடவும்.

5. அனைத்தும் சரியாக இருப்பின், உங்கள் படிவம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற செய்தி வரும்.

6. ஒருவேளை, படிவம் சப்மிட் செய்யப்படவில்லை என்றால் எச்சரிக்கை தகவல் வெளியாகும்.

7. உடனடியாக நீங்கள் அளித்த தகவல்களை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து தவறுகள் இருந்தால் சரி செய்து சப்மிட் செய்யலாம்.

https://contents.irctc.co.in/en/BookUpto12ticketsinamonthbylinkingAadhaar.pdf

நிலம்பூர் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்

கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.கேரள மாநிலம், நிலம்பூர் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த அன்வர், ராஜிநாமா செய்த நிலையில் அங்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்... மேலும் பார்க்க

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மகளை அடித்துக் கொன்ற தந்தை!

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தற்காக மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தில் இந்த சம்பவம்... மேலும் பார்க்க

புவனேஸ்வர் செல்லும் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

இந்தூரிலிருந்து புவனேஸ்வர் செல்லும் 140 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காணமாக ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையை நோக்கிச் சென்றுகொண்ட... மேலும் பார்க்க

ஹிமாசலில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது!

ஹிமாசலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 24 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆசிரியர் ஒரு கைது செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு முதல... மேலும் பார்க்க

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி- ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு

கார் டயரில் சிக்கி தொண்டர் பலியான விவகாரத்தில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்... மேலும் பார்க்க

நக்ஸல்களுடன் பேச்சு கிடையாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, வளா்ச்சிப் பயணத்தில் இணைய வேண்டும்; அவா்களுடன் பேச்சுவாா்த்தை அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். நாட்டில் நக்ஸல் தீவிரவாதிகளுக்க... மேலும் பார்க்க