செய்திகள் :

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி- ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு

post image

கார் டயரில் சிக்கி தொண்டர் பலியான விவகாரத்தில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கார் ஓட்டுநர் ரமண ரெட்டியையும் கைது செய்துள்ளனர். பலியானவரின் மனைவி சீலி லுர்து மேரி உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆந்திரம் மாநிலம், சட்டெனப்பள்ளி தொகுதிக்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி வருகை தந்திருந்த முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைக் காண பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சட்டெனப்பள்ளி தொகுதிக்குள்பட்ட தடேப்பள்ளியிலிருந்து புறப்பட்டு ரெண்டேப்பல்லாவுக்கு பேரணியாக காரில் சென்ற ஜெகனுக்கு வழிநெடுகிலும் அவரது தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகப்படுத்தினர்.

இந்தநிலையில், சாலையில் திரண்டிருந்த கூட்டத்தில் ஒருத்தராக முன் வரிசையில் நின்று கொண்டிருந்த சீலி சிங்கையா எதிர்பாராதவிதமாக ஜெகன்மோகன் சென்று கொண்டிருந்த காரின் முன், நிலை தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் விழுந்ததை கவனிக்காத ஓட்டுநரும் உடனடியாக வாகனத்தை நிறுத்தாததால், காரின் முன்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.

அதில் அவர் உடல் நசுங்கி பலியானார். பலியான நபர் சீலி சிங்கையா என்பதும் அவருக்கு வயது 65 என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரகாசமாக எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்; வாழ்த்தியவர்களுக்கு நன்றி: விஜய்!

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மகளை அடித்துக் கொன்ற தந்தை!

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தற்காக மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தில் இந்த சம்பவம்... மேலும் பார்க்க

புவனேஸ்வர் செல்லும் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

இந்தூரிலிருந்து புவனேஸ்வர் செல்லும் 140 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காணமாக ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையை நோக்கிச் சென்றுகொண்ட... மேலும் பார்க்க

ஹிமாசலில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது!

ஹிமாசலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 24 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆசிரியர் ஒரு கைது செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு முதல... மேலும் பார்க்க

தட்கல் டிக்கெட் - ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம்

விரைவு ரயிலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் மூலம் ஓடிபி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்கும்படி இந்திய ரயில்... மேலும் பார்க்க

நக்ஸல்களுடன் பேச்சு கிடையாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, வளா்ச்சிப் பயணத்தில் இணைய வேண்டும்; அவா்களுடன் பேச்சுவாா்த்தை அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். நாட்டில் நக்ஸல் தீவிரவாதிகளுக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை

பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில், பஞ்சாபில் ராணுவ வீரா், அவரது கூட்டாளி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை ஐஎஸ்ஐ செயல்பாட்டாளா்களிடம் அவா்கள் ப... மேலும் பார்க்க