செய்திகள் :

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மகளை அடித்துக் கொன்ற தந்தை!

post image

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தற்காக மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தில் இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றதாக போலீஸார் ஒருவர் தெரிவித்தார்

தோண்டிராம் போசலே (45), பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் சாதனா(16) மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவில் நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவரின் தந்தை போசலே கோபமடைந்துள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

ஒருகட்டத்தில் மாவு தயாரிக்கப் பயன்படுத்தும் கல் அரவை இயந்திரத்தின் மரக் கைப்பிடியைப் பிடித்து, தனது மனைவி, மகன் முன்னிலையில் மகளை பலமாகத் தாக்கியுள்ளார்.

பலத்த காயமடைந்த 16 வயது சிறுமியை சாங்லியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இளம்பெண், சிகிச்சையின் போது உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பலத்த காயங்களால் அவர் இறந்ததாகத் தெரியவந்துள்ளதாக அட்பாடி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் வினய் பாஹிர் தெரிவித்தார்.

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இதையும் படிக்க:ஹிமாசலில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது!

தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு!

தில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளம், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தொடங்கியுள்ள... மேலும் பார்க்க

ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்!

தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் ஒரு பயணியை அதே ரயிலில் பயணித்த பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி - போபால் இடையேயான வந்தே பாரத் ரய... மேலும் பார்க்க

பஞ்சாப்: லூதியானா மேற்கு தொகுதியைத் தக்கவைத்த ஆம் ஆத்மி!

பஞ்சாபின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது. லூதியானா மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோராவின் நெருங்கிய போட்டியாளரான காங்... மேலும் பார்க்க

குஜராத் இடைத்தேர்தல்: பாஜக - 1; ஆம் ஆத்மி - 1 வெற்றி!

குஜராத்தில் இரு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜக ஒரு தொகுதியிலும் ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் காதி மற்றும் விசாவதர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த ஜனவரி 19... மேலும் பார்க்க

நிலம்பூர் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்

கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.கேரள மாநிலம், நிலம்பூர் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த அன்வர், ராஜிநாமா செய்த நிலையில் அங்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்... மேலும் பார்க்க

புவனேஸ்வர் செல்லும் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

இந்தூரிலிருந்து புவனேஸ்வர் செல்லும் 140 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காணமாக ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையை நோக்கிச் சென்றுகொண்ட... மேலும் பார்க்க