செய்திகள் :

குஜராத் இடைத்தேர்தல்: பாஜக - 1; ஆம் ஆத்மி - 1 வெற்றி!

post image

குஜராத்தில் இரு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜக ஒரு தொகுதியிலும் ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தில் காதி மற்றும் விசாவதர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த ஜனவரி 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று(ஜூன் 23) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் குஜராத்தில் காதி தொகுதியில் ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் ராஜேந்திர குமார் 39,452 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேநேரத்தில் விசாவதர் தொகுதியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. அதன்படி இத்தாலியா கோபால் 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் சஞ்சீவ் அரோரா வெற்றியை நெருங்கி வருகிறார். தற்போது காங்கிரஸ் வேட்பாளரைவிட 10,637 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியில் பாஜக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கேரளத்தின் நிலாம்பூர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மேற்குவங்கத்தின் காலிகன்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்

ஈரானுடன் போர்: இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் வருகை!

ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் ஜோர்டான் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். போர் எ... மேலும் பார்க்க

விண்வெளி நாயகியாகும் ஆந்திர இளம்பெண்: சர்வதேச விண்வெளி வீராங்கனையாகத் தேர்வு!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் பட்டதாரி ’ஜானவி தங்கேட்டி’ அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘டைட்டான் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(டிஎஸ்ஐ) மேற்கொண்டுவரும் விண்வெளி திட்டத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்: கார்கே!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். கார்கே ராய்ச்சூரில் கார்கே பல்வேறு திட... மேலும் பார்க்க

தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு!

தில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளம், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தொடங்கியுள்ள... மேலும் பார்க்க

ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்!

தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் ஒரு பயணியை அதே ரயிலில் பயணித்த பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி - போபால் இடையேயான வந்தே பாரத் ரய... மேலும் பார்க்க

பஞ்சாப்: லூதியானா மேற்கு தொகுதியைத் தக்கவைத்த ஆம் ஆத்மி!

பஞ்சாபின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது. லூதியானா மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோராவின் நெருங்கிய போட்டியாளரான காங்... மேலும் பார்க்க