செய்திகள் :

எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்: கார்கே!

post image

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

கார்கே ராய்ச்சூரில் கார்கே பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் அத்துடன் ராய்ச்சூர் பல்கலைக்கழகத்தின் பெயர் சூட்டும் விழாவிற்கும் தலைமை தாங்கினார். அவருடன் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உடனிருந்தனர்.

கர்நாடகத்தில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய கார்கே,

நாடு கடினமான கட்டத்தைக் கடந்து வருவதாகவும், சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் அதற்கு சான்று.

நாட்டைப் பாதுகாக்க முழு நாடும் ஆயுதப் படைகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டாலும், சில தனிநபர்கள் தனிப்பட்ட முறையில் பெருமையைச் சேர்க்க முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலில் கோரியவர் காங்கிரஸ் தான். அனைத்துக் கட்சி கூட்டங்கள் இரண்டு முறை நடத்தப்பட்டபோதிலும் ​பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முக்கியமான பணிகளை விட்டுச் சென்றதாகவும், ஆனால் பிரதமர் நாட்டில் இருந்தபோதிலும் கலந்துகொள்ள விரும்பவில்லை. மாறாக பிகார் தேர்தலுக்கான பிரசாரத்தில் அவர் மும்முரமாக இருந்தார்.

அதன் அர்த்தம் என்ன? நாடும் வீரர்களும் ஒருபக்கம் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, பிரதமர் மறுபுறம் பிரசாரம் செய்யத் தேர்ந்தெடுத்தார். இது பொருத்தமற்றது. அத்தகைய அணுகுமுறை நல்லதல்ல.

எதிர்க்கட்சியை நீங்கள் குறைத்து மதிப்பிட முயன்றால், தலைவர்கள், மக்கள் குறிப்பாக இந்த நாட்டின் இளைஞர்கள் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் எச்சரித்தார்.

ஈரான் போரால் பாஸ்மதி அரிசிக்கு வந்த சோதனை!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரின் காரணமாக ஈரானுக்கு ஏற்றுமதியாக வேண்டிய ஒரு லட்சம் டன் பாஸ்மதி அரிசி துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளன.இந்தியாவில் உற்பத்தியாகும் பாஸ்மதி அரிசியில் 18% - 20% ஈரானுக்கு ஏற்ற... மேலும் பார்க்க

மே.வங்கம்: இடைத்தேர்தலில் பாஜக தோல்வி! ஆளும் திரிணமூல் காங். பெருவெற்றி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கலிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலிஃபா அஹமது வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, இதே தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு பொதுத... மேலும் பார்க்க

ஈரானுடன் போர்: இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் வருகை!

ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் ஜோர்டான் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். போர் எ... மேலும் பார்க்க

விண்வெளி நாயகியாகும் ஆந்திர இளம்பெண்: சர்வதேச விண்வெளி வீராங்கனையாகத் தேர்வு!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் பட்டதாரி ’ஜானவி தங்கேட்டி’ அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘டைட்டான் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(டிஎஸ்ஐ) மேற்கொண்டுவரும் விண்வெளி திட்டத்த... மேலும் பார்க்க

தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு!

தில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளம், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தொடங்கியுள்ள... மேலும் பார்க்க

ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்!

தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் ஒரு பயணியை அதே ரயிலில் பயணித்த பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி - போபால் இடையேயான வந்தே பாரத் ரய... மேலும் பார்க்க