எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்: கார்கே!
பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
கார்கே ராய்ச்சூரில் கார்கே பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் அத்துடன் ராய்ச்சூர் பல்கலைக்கழகத்தின் பெயர் சூட்டும் விழாவிற்கும் தலைமை தாங்கினார். அவருடன் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உடனிருந்தனர்.
கர்நாடகத்தில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய கார்கே,
நாடு கடினமான கட்டத்தைக் கடந்து வருவதாகவும், சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் அதற்கு சான்று.
நாட்டைப் பாதுகாக்க முழு நாடும் ஆயுதப் படைகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டாலும், சில தனிநபர்கள் தனிப்பட்ட முறையில் பெருமையைச் சேர்க்க முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலில் கோரியவர் காங்கிரஸ் தான். அனைத்துக் கட்சி கூட்டங்கள் இரண்டு முறை நடத்தப்பட்டபோதிலும் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முக்கியமான பணிகளை விட்டுச் சென்றதாகவும், ஆனால் பிரதமர் நாட்டில் இருந்தபோதிலும் கலந்துகொள்ள விரும்பவில்லை. மாறாக பிகார் தேர்தலுக்கான பிரசாரத்தில் அவர் மும்முரமாக இருந்தார்.
அதன் அர்த்தம் என்ன? நாடும் வீரர்களும் ஒருபக்கம் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, பிரதமர் மறுபுறம் பிரசாரம் செய்யத் தேர்ந்தெடுத்தார். இது பொருத்தமற்றது. அத்தகைய அணுகுமுறை நல்லதல்ல.
எதிர்க்கட்சியை நீங்கள் குறைத்து மதிப்பிட முயன்றால், தலைவர்கள், மக்கள் குறிப்பாக இந்த நாட்டின் இளைஞர்கள் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் எச்சரித்தார்.