செய்திகள் :

எரிசக்தி குழாய் திறனில் ரூ.844 கோடி முதலீடு செய்யும் கெயில்!

post image

புது தில்லி: அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக தஹேஜ்-உரான்-டபோல்-பன்வெல் இயற்கை எரிவாயு குழாய்த் திறனை விரிவுபடுத்த ரூ.844 கோடி முதலீடு செய்யப்போவதாக அரசுக்குச் சொந்தமான எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான கெயில் தெரிவித்துள்ளது.

தஹேஜ்-உரான்-டாபோல்-பன்மெல் இயற்கை வாயு குழாய் DUPL-DPPL நெட்வொர்க், தற்போது நாள் ஒன்றுக்கு 19.9 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவை கடத்தும் திறன் கொண்டது. இது தற்போது நாள் ஒன்றுக்கு 22.5 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் ஆக விரிவுபடுத்தப்படும் நிலையில், வரும் மூன்று ஆண்டு காலத்திற்குள் குழாய்களின் கொள்ளளவும் அதிகரிக்கப்படும் என்றும் அதற்கு ரூ.844 கோடி தேவைப்படும் என்றது.

இதற்கிடையில் ஜூன் 30, 2025 முதல் செப்டம்பர் 30, 2025 வரையான காலத்தில் 1,702 கிமீ மும்பை-நாக்பூர்-ஜார்சுகுடா குழாய் (MNJPL) திட்டத்தை தாமதப்படுத்தியுள்ளதாகவும் இதற்கு கூடுதலாக ரூ.411.12 கோடி முதலீடு தேவைப்படும் என்றது.

இதற்கிடையில் திட்டச் செலவு ரூ.411.12 கோடி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மும்பை-நாக்பூர்-ஜார்சுகுடா குழாய் திட்டத்திற்கான திருத்தப்பட்ட திட்டச் செலவு ரூ.8,255.37 கோடியாகும் என்றது. இது முதலில் அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவான ரூ.7,844.25 கோடியை விட 5.24% அதிகமாகும்.

மும்பை-நாக்பூர் குழாய் பதித்தல் பணி 693 கி.மீ. வரை நிறைவடைந்த நிலையில், மீதம் 1 கிலோ நிலுவையில் உள்ளதாகவும், நாக்பூர்-ஜார்சுகுடா குழாய் பதித்தல் பணி 692 கிமீ வரை நிறைவடைந்து 98 சதவிகிதம் நிறைவு பெற்றதாக தெரிவித்தது.

மகாராஷ்டிராவில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் வன அனுமதி, தேசிய வனவிலங்கு வாரியம் அனுமதி மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறுவதில் தாமதம் காரணமாக குழாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

நாக்பூர்-ஜபல்பூர் குழாயின் 317 கிமீ குழாய் அமைக்கும் பாதை 97 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் பயன்பாட்டு உரிமை கையகப்படுத்துவதில் தாமதம் மற்றும் உள்ளூர் எதிர்ப்பு காரணமாக குழாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை-நாக்பூர்-ஜார்சுகுடா குழாய் அமைக்கும் பாதை செப்டம்பர் 2025க்குள் படிப்படியாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது கெயில்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.86.78 ஆக முடிவு!

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 2.77% பங்குகளை கையகப்படுத்திய மோதிலால் ஓஸ்வால்!

புதுதில்லி: நொய்டாவை தளமாகக் கொண்ட டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) நிறுவனத்தின் உரிமையாளரான சுனில் வச்சானி தனது 2.77% பங்குகளை அதாவது 16.70 லட்சம் பங்குகளை ரூ.2,221 கோடிக்கு ஒப்பந்தத்தின் மூலம் கைமாறியத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.86.78 ஆக முடிவு!

மும்பை: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து டாலர் வலுவடைதல் மற்றும் நிலையற்ற கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பால் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவு!

மும்பை: ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குண்டு வீசித் தாக்கியதையடுத்து, மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் உள்ளூரில் பங்குச... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்: கடும் சரிவில் பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,704.07 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.46... மேலும் பார்க்க

ஈரான் மீது தாக்குதல்: பங்குச்சந்தைகளில் சரிவு

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 62,940 புள்ளிக... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையில் மாற்றமில்லை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும் ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கு விற்பனையாகிறது.கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.73,... மேலும் பார்க்க