சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை
நாகா்கோவில் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாகா்கோவிலை அடுத்த செண்பகராமன்புதூா் சமத்துவபுரம் காலனியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த 2018 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். மாணவியின் சகோதரரின் நண்பரான 17 வயது சிறுவன், அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபோது மாணவிக்கும், அந்த சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவியை திருமணம் செய்வதாகக் கூறிய சிறுவன், அவரை தனது உறவினா் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இது குறித்து மாணவியின் பெற்றோா், நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிறுவன் மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு, நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா்.