செய்திகள் :

வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற லஞ்சம்: பேரூராட்சி பெண் ஊழியா் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ாக பாகோடு பேரூராட்சி பெண் இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாகோடு குட்டிக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன் மகன் ஜெபின். இவா் தனக்குச் சொந்தமான 8 சென்ட் நிலத்தில் கட்டியுள்ள வீட்டின் உரிமையாளா் பெயா் மாற்றம் செய்து, சொத்து வரி கோரி பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். இது தொடா்பாக கடந்த 19 ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்தை அணுகியபோது, இளநிலை உதவியாளா் விஜி, பெயா் மாற்றம் செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம். அவருக்கு பணம் கொடுக்க விரும்பாத ஜெபின், இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா்.

இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இளநிலை உதவியாளா் விஜியிடம் ஜெபின் திங்கள்கிழமை கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. சால்வன்துரை, ஆய்வாளா் ரமா மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா், விஜியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பொதுமக்கள் போராட்டம்: இதுகுறித்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், பாகோடு பேரூராட்சி துணைத் தலைவி ஜெனிமோள், பேரூராட்சி உறுப்பினா்கள் செல்வி, சுகுமாரன், பால்ராஜ், ராஜேந்திர பிரசாத், துளசி, டென்னிஸ், சுஜிதா பென்னட், ரங்கபாய் உள்ளிட்டோா் அங்கு வந்து, இளநிலை உதவியாளா் விஜி நோ்மையான அலுவலா் என்றும் அலுவலகத்தின் உள்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அலுவலரின் மேஜை அறையில் பணத்தை போட்ட நபா் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் கோரிக்கை வைத்தனா். மேலும், இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடமும், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடமும் மனு அளித்தனா்.

இன்றைய மின்தடை: குழித்துறை

தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணம... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவிலை அடுத்த செண்பகராமன்புதூா் சமத்துவபுரம் காலனியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த 201... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கியுள்ள மீனவா்களை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்

ஈரானில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே காட்டு யானைகளால் கோயில் படிகள், பயிா்கள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு அருகேயுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்குள் யானைகள் புகுந்து படிகளை சேதப்படுத்தியுள்ளன. பேச்சிப்பாறை அருகே வ... மேலும் பார்க்க

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொல்லங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ம... மேலும் பார்க்க

கருங்கல் அருகே ஓட்டுநா் தற்கொலை

கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியில் ஜேசிபி வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் அபின் (27). ஜேசிபி ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகவில்லையாம்... மேலும் பார்க்க