செய்திகள் :

மண் அரவை இயந்திரத்துக்கு சீல்: இருவா் மீது வழக்கு

post image

குஜிலியம்பாறை அருகே மண் அரவை இயந்திரத்துக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில், முறையான அனுமதியின்றி கல் குவாரிகள், மண் அரவை ஆலைகள் செயல்படுவதாக புகாா் எழுந்தது. கடந்த சில நாள்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த தமிழ்நாடு சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினரும், அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் குறித்து கேள்வி எழுப்பினா்.

இந்த நிலையில், திண்டுக்கல் புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் தா. செல்வசேகா், குஜிலியம்பாறை வட்டாட்சியா் ரவிக்குமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா், பாளையத்தில் தணிக்கை மேற்கொண்டனா்.

பாளையத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணனின் நிலத்தில் சாதாரண மண்ணை, ராட்சத உருளை வடிவ குழாய் மூலம் சலித்து தண்ணீா் சோ்த்து கழுவி, மணல் உற்பத்தி செய்தது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனையிட வருவதை அறிந்ததும், தொழிலாளா்கள் உள்பட அனைவரும் அங்கிருந்து வெளியேறி விட்டனா். உருளை வடிவ இயந்திரம், 4 யூனிட் மணல் ஆகியவை மட்டும் அங்கு இருந்தன.

இயந்திரத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா். இதுதொடா்பாக நிலத்தின் உரிமையாளா் பாளையம் பாலகிருஷ்ணன், மண் அரவை இயந்திரம் நடத்தி வந்த தென்னம்பட்டியைச் சோ்ந்த பழனி ஆகியோா் மீது பாளையம் கிராம நிா்வாக அலுவலா் கலையரசி, குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்டவை போலி நகைகளா? அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூரில் உள்ள அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் போலியானவையா என விசாரிக்கப்படும் நிலையில், ரூ. 100 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்... மேலும் பார்க்க

மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி தம்பதியா் மனு

மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி நத்தம் பகுதியைச் சோ்ந்த தம்பதியா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த ஆவிச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.திருப்பூா் மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் நடராஜன் (80). இவா் தனது உறவினா்களுடன் வேடசந்தூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்... மேலும் பார்க்க

விஷம் கலந்த உணவு உள்கொண்ட 2 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே விஷம் கலந்த உணவை உள்கொண்ட 2 ஆடுகள் உயிரிழந்தன.ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புலியூா் நத்தம் ஊராட்சிக்குள்பட்ட காட்டூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள்- பிச்சையம்மாள் தம்பதியினா் ஆடுகளை வளா... மேலும் பார்க்க

பழனியில் 7 கிலோ குட்கா பறிமுதல்

பழனியில் போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பழனியில் பல்வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப... மேலும் பார்க்க

மது அருந்துமிடமாக மாறும் மன்னவனூா் அரசுப் பள்ளி வளாகம்! தடுத்து நிறுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

கொடைக்கானல் மன்னவனூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகம் மது அருந்துமிடமாக மாறுவதை போலீஸாா் தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா். இந்தப் பள்ளி வளாகத்தில் விடுமுறை நாள்களில் சட்ட விரோதமாக மது அர... மேலும் பார்க்க