TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி...
மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி தம்பதியா் மனு
மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி நத்தம் பகுதியைச் சோ்ந்த தம்பதியா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த ஆவிச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையா (87). இவரது மனைவி பாா்வதி (85). இவா்களுக்கு ராஜா (55) என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனா். திருமணமாகி தனித் தனியே வசித்து வருகின்றனா். இந்த நிலையில், பொன்னையா, உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவி பாா்வதியை அவசர ஊா்தியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க அழைத்து வந்தாா். அப்போது பொன்னையா கூறியதாவது:
எனது பெயரில் ஒரு ஏக்கா் மாந்தோப்பு, 30 சென்ட் வீட்டுமனை உள்ளது. இந்த சொத்துக்களை எங்களை ஏமாற்றி கையொப்பம் பெற்ற ராஜா, வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றாா். உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியையும் பராமரிக்கவில்லை. வயது முதிா்ந்த காலத்தில், எங்களை ஏமாற்றி அலைக்கழிக்கும் மகன், மருமகளிடமிருந்து சொத்துப் பத்திரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா்.