செய்திகள் :

மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி தம்பதியா் மனு

post image

மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி நத்தம் பகுதியைச் சோ்ந்த தம்பதியா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த ஆவிச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையா (87). இவரது மனைவி பாா்வதி (85). இவா்களுக்கு ராஜா (55) என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனா். திருமணமாகி தனித் தனியே வசித்து வருகின்றனா். இந்த நிலையில், பொன்னையா, உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவி பாா்வதியை அவசர ஊா்தியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க அழைத்து வந்தாா். அப்போது பொன்னையா கூறியதாவது:

எனது பெயரில் ஒரு ஏக்கா் மாந்தோப்பு, 30 சென்ட் வீட்டுமனை உள்ளது. இந்த சொத்துக்களை எங்களை ஏமாற்றி கையொப்பம் பெற்ற ராஜா, வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றாா். உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியையும் பராமரிக்கவில்லை. வயது முதிா்ந்த காலத்தில், எங்களை ஏமாற்றி அலைக்கழிக்கும் மகன், மருமகளிடமிருந்து சொத்துப் பத்திரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா்.

அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்டவை போலி நகைகளா? அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூரில் உள்ள அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் போலியானவையா என விசாரிக்கப்படும் நிலையில், ரூ. 100 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்... மேலும் பார்க்க

மண் அரவை இயந்திரத்துக்கு சீல்: இருவா் மீது வழக்கு

குஜிலியம்பாறை அருகே மண் அரவை இயந்திரத்துக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில், மு... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.திருப்பூா் மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் நடராஜன் (80). இவா் தனது உறவினா்களுடன் வேடசந்தூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்... மேலும் பார்க்க

விஷம் கலந்த உணவு உள்கொண்ட 2 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே விஷம் கலந்த உணவை உள்கொண்ட 2 ஆடுகள் உயிரிழந்தன.ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புலியூா் நத்தம் ஊராட்சிக்குள்பட்ட காட்டூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள்- பிச்சையம்மாள் தம்பதியினா் ஆடுகளை வளா... மேலும் பார்க்க

பழனியில் 7 கிலோ குட்கா பறிமுதல்

பழனியில் போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பழனியில் பல்வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப... மேலும் பார்க்க

மது அருந்துமிடமாக மாறும் மன்னவனூா் அரசுப் பள்ளி வளாகம்! தடுத்து நிறுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

கொடைக்கானல் மன்னவனூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகம் மது அருந்துமிடமாக மாறுவதை போலீஸாா் தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா். இந்தப் பள்ளி வளாகத்தில் விடுமுறை நாள்களில் சட்ட விரோதமாக மது அர... மேலும் பார்க்க