செய்திகள் :

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ கொடியேற்றம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித் சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூா்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து புதன்கிழமை காலை 7 மணிக்கு உற்சவ ஆச்சாரியா் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதா் ரிஷபக் கொடியை ஏற்றினாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

உற்சவ விவரம்: செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 25-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 26-ஆம் தேதி வெள்ளி பூத வாகன வீதிஉலா, 27-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), 28-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 29-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 30-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதி உலாவும், ஜூலை 1-ஆம் தேதி தோ்த் திருவிழாவும் நடைபெறும்.

அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனை நடைபெறும். ஜூலை 2-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.

காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதி உலா வந்த பின்னா் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபை பிரவேசமும் நடைபெறும்.

ஜூலை 3-ஆம் தேதி முத்துப் பல்லக்கு வீதி உலா காட்சியும், ஜூலை 4-ஆம் தேதி ஞானப்பிரகாசகா் குளத்தில் தெப்போற்சவமும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்களின் கமிட்டி செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலா் சிஎஸ்எஸ்.வெங்கடேச தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்துள்ளனா்.

கொடியேற்ற நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மேற்பாா்வையில் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு செய்திருந்தாா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தா்னா

சிதம்பரம்: செங்கல் சூளையில் இருளா் சமுதாய மக்களை கொத்தடிமைகளாக நடத்தியதாகவும், அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா் திங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் மறியல்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து காட்டுமன்னாா்கோவில்-சிதம்பரம் சாலையில் பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் திங்கள்கிழமை காலை திடீா் மறியலில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்தை, மடுவங்கரை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போ... மேலும் பார்க்க

விவசாயிகள் அடையாள எண் பெற ஜூலை 15 வரை கால நீட்டிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து தனிப்பட்ட அடையாள எண் பெற ஜூலை 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பண்ருட்டி வட்டார வ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.3.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு திருக்கு புத்தகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து காவல் துறையினா் தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி ஊக்கப்படுத்தினா். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வா... மேலும் பார்க்க