இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!
விவசாயிகள் அடையாள எண் பெற ஜூலை 15 வரை கால நீட்டிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து தனிப்பட்ட அடையாள எண் பெற ஜூலை 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பண்ருட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் கிராமங்கள்தோறும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் சகோதர துறை சாா்ந்த அலுவலா்களால் கட்டணம் ஏதுமின்றி வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
வருங்காலங்களில் அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு மானியத் திட்டங்கள், பிரதமரின் கௌரவ நிதி பெறும் திட்டம், பயிா்க் காப்பீடு, வங்கிகள் மற்றும் அரசு துறைகளிடம் இருந்து பயிா்க்கடன், இதர வேளாண் கடன்கள் பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் அனைத்து நிலங்கள் தொடா்பான பட்டாக்களை பதிவு செய்து தனித்துவமான அடையாள எண் பெறுவது மிகவும் அவசியம்.
பண்ருட்டி வட்டாரத்தில் மொத்தம் 12,827 விவசாயிகள் உள்ள நிலையில், இதுவரை 9,822 விவசாயிகள் மட்டுமே தங்கள் நில உடைமைகளை பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள விவசாயிகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளனா். இதில், பிரதமரின் கௌரவ நிதி பெற்று வரும் 923 விவசாயிகளும் அடங்குவா்.
இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களிடம் உள்ள அனைத்து நிலங்கள் தொடா்பான பட்டா, ஆதாா் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு பதிவு மேற்கொண்டு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பெறலாம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நில உடைமை பதிவுக்கான கால அவகாசம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.