மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
தலைமை ஆசிரியா் பணியிட மாற்றத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்தை, மடுவங்கரை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், கிள்ளை அருகே உள்ள மடுவங்கரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 65-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
தலைமை ஆசிரியா் உள்பட மூன்று ஆசிரியா்கள் பணியில் உள்ளனா். இந்தப் பள்ளியில் புதிதாக தற்காலிக ஆசிரியா் நியமிப்பதில் கிராமத்தினா் இடையே பிரச்னை இருந்து வருகிறது.
தலைமை ஆசிரியா் ஈஸ்வரி மீது மடுவங்கரை கிராமத்தை சோ்ந்த சிலா், வட்டாரக் கல்வி அதிகாரிகளிடம் புகாா் செய்ததால், கடந்த 19-ஆம் தேதி சிதம்பரத்தை அடுத்த சி.கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதைக் கண்டித்து மடுவங்கரை கிராமத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை பரங்கிப்பேட்டையை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் உள்ள பரங்கிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டார கல்வி அலுவலா்கள் கந்தசாமி, உமாராணி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாணவா்களின் நலன் கருதி தலைமை ஆசிரியா் ஈஸ்வரியை பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்து, மீண்டும் இந்தப் பள்ளியில் நியமிக்க கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக வட்டாரக் கல்வி அலுவலா்கள் உறுதியளித்தால், போராட்டம் கைவிடப்பட்டது.