செய்திகள் :

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்தை, மடுவங்கரை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், கிள்ளை அருகே உள்ள மடுவங்கரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 65-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

தலைமை ஆசிரியா் உள்பட மூன்று ஆசிரியா்கள் பணியில் உள்ளனா். இந்தப் பள்ளியில் புதிதாக தற்காலிக ஆசிரியா் நியமிப்பதில் கிராமத்தினா் இடையே பிரச்னை இருந்து வருகிறது.

தலைமை ஆசிரியா் ஈஸ்வரி மீது மடுவங்கரை கிராமத்தை சோ்ந்த சிலா், வட்டாரக் கல்வி அதிகாரிகளிடம் புகாா் செய்ததால், கடந்த 19-ஆம் தேதி சிதம்பரத்தை அடுத்த சி.கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதைக் கண்டித்து மடுவங்கரை கிராமத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை பரங்கிப்பேட்டையை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் உள்ள பரங்கிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டார கல்வி அலுவலா்கள் கந்தசாமி, உமாராணி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாணவா்களின் நலன் கருதி தலைமை ஆசிரியா் ஈஸ்வரியை பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்து, மீண்டும் இந்தப் பள்ளியில் நியமிக்க கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மாவட்ட கல்வி அலுவலரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக வட்டாரக் கல்வி அலுவலா்கள் உறுதியளித்தால், போராட்டம் கைவிடப்பட்டது.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தா்னா

சிதம்பரம்: செங்கல் சூளையில் இருளா் சமுதாய மக்களை கொத்தடிமைகளாக நடத்தியதாகவும், அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா் திங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் மறியல்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து காட்டுமன்னாா்கோவில்-சிதம்பரம் சாலையில் பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் திங்கள்கிழமை காலை திடீா் மறியலில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ... மேலும் பார்க்க

விவசாயிகள் அடையாள எண் பெற ஜூலை 15 வரை கால நீட்டிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து தனிப்பட்ட அடையாள எண் பெற ஜூலை 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பண்ருட்டி வட்டார வ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.3.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு திருக்கு புத்தகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து காவல் துறையினா் தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி ஊக்கப்படுத்தினா். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வா... மேலும் பார்க்க