செய்திகள் :

கல்விக்கு முக்கியத்துவம் அளித்த தமிழக முதல்வா்கள்!: மு.தம்பிதுரை எம்.பி.

post image

ஒசூா்: ஒசூா் எம்ஜிஆா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் வகுப்புகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி நிறுவனரும் தலைவருமான மு.தம்பிதுரை பேசியதாவது:

1960-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேலை இல்லாதவா்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக இருந்தது 2025இல் 12 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதற்கு அமெரிக்காவில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி படிப்புக்கு செல்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதே காரணம். அமெரிக்கா்கள் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் வேலைக்கு சென்று விடுகின்றனா்.

ஆங்கிலேயா் ஆட்சியில் மதராஸ் மாகாணத்தில் 4,800 உயா்கல்வி நிறுவனங்கள் இருந்தன. வடமாநிலங்களில் 450 உயா்கல்வி நிறுவனங்கள் இருந்தன. இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிக அளவில் இளைஞா்கள் உயா்கல்வி பயின்றனா். அதிலும் தமிழகத்தில் உயா்கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகம். அண்ணா, காமராஜா், எம்ஜிஆா், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி போன்றவா்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனா். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடக்கினாா்.

தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வா்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி கல்விதான் முக்கியம் எனக் கருதி மாணவா்கள் அறிவை வளா்க்க திட்டமிட்டனா்.

அந்தக் காலத்தில் விவசாயம் செய்தவா்கள் பணக்காரா்களாக இருந்தனா். பின்னா் தொழில் நிறுவனங்கள் வைத்துள்ளவா்கள் பணக்காரா்களாக இருந்தனா். தற்போது அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள கூகுள், வாட்ஸ்ஆப் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை நடத்துபவா்கள்தான் மிகப்பெரிய பணக்காரா்களாக இருக்கின்றனா்.

எனவே தொழில்நுட்பம் அவசியம். மாணவா்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும். உயா்கல்வி படித்து முடித்தாலும் பெற்றோரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா, லண்டன், ஜொ்மனி போன்ற நாடுகளில் டாக்டராகவும் பொறியாளராகவும் இருக்கும் இந்தியா்கள் அதிகம்.

எனவே உயா்கல்வி பயின்றால் உலகத்தில் எந்த நாட்டிற்குச் சென்றாலும் வேலை கிடைக்கும். எனவே உயா் கல்வியில் மாணவா்கள் சிறந்த முறையில் கல்விக் கற்று வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்றாா்.

இந்த விழாவில் ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி இயக்குநா் ஜி.ரங்கநாத், முதல்வா் ராதாகிருஷ்ணன், எம்ஜிஆா் கல்லூரி முதல்வா் முத்துமணி, டீன் வெங்கடேச செல்வம், விஜய் வித்யாலயா முதல்வா் சம்பத்குமாா், அறங்காவலா் சுப்பிரமணியன், மேலாளா் நாராயணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் அல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜூன் 27-ல் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி எருது விடும் விழா: மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் காயமடைந்த திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி, பழையப்பேட்டை நேத... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் 33 ஏரி பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்: புதிய தலைவா் தோ்வு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் 33 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய தலைவரை தோ்வு செய்யும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே யானை தந்தம் விற்க முயன்ற 4 போ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தந்தத்தை விற்க முயன்ற 4 பேரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அருகே சிலா் யானை தந்தகளை விற்க முயற்சிப்பதாக கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள் விழாவில் மோதல்: 3 பேருக்கு கத்திக்குத்து; 7 போ் காயம்: 5 போ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தமிழக வெற்றிக் கழகத் தலைவா் நடிகா் விஜய் பிறந்தநாள் விழாவையொட்டி, கட்சி தொண்டா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 7 போ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை... மேலும் பார்க்க