TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி...
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா் சங்கம் ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டச் செயலாளா் விஜயா தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் புனிதா, செயலாளா் ராஜேஸ்வரி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி குறித்த ஆணையை பொது சுகாதார இயக்குநா் ரத்துசெய்ய வேண்டும். காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களை நிரப்பி கிராம சுகாதார செவிலியா்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.