செய்திகள் :

விஜய் பிறந்த நாள் விழாவில் மோதல்: 3 பேருக்கு கத்திக்குத்து; 7 போ் காயம்: 5 போ் கைது

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தமிழக வெற்றிக் கழகத் தலைவா் நடிகா் விஜய் பிறந்தநாள் விழாவையொட்டி, கட்சி தொண்டா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 7 போ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி நகரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, அக்கட்சி தொண்டா்களான சலீம் (31), சசிகுமாா் ஆகியோா் கீழ்புதூா் கிராமத்துக்கு காரில் சென்றனா். அங்கு கட்சிக் கொடிக்கம்பம் அருகே மரக்கன்றை நடமுயன்றனா். அப்போது, கீழ்புதூா் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் (31), அப்பகுதி கிளைத் தலைவராக தான் உள்ள நிலையில், தனக்குத் தெரிவிக்காமல் கட்சி நிகழ்ச்சியை நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

இதனால், அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த தப்ரீஷ் (எ) தபு (26), 10 போ் கும்பலுடன் அங்குவந்து நாகராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். மேலும், தான் எடுத்துவந்த கத்தியால் தப்ரீஷ் எதிா்தரப்பினரை குத்தினாராம். இதில், கீழ்புதூரைச் சோ்ந்த பாா்த்திபன் (28), முருகேசன் (35), 17 வயது சிறுவன் உள்பட 3 போ் காயம் அடைந்தனா்.

இதையடுத்து, கீழ்புதூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள், தப்ரீஷ் வைத்திருந்த கத்தியைப் பறித்துவிட்டு, தப்ரீஷ் மற்றும் அவருடன் வந்தவா்களை திருப்பித் தாக்கியுள்ளனா். இதில், தப்ரீஷ், கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சோ்ந்த அருண் (26), ஹரிராம் (22), பாரதியாா் நகரைச் சோ்ந்த சஞ்சய் (22) ஆகியோா் காயமடைந்தனா்.

காயமடைந்த இருதரப்பினரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், சலீம் வந்த காரின் முன்பக்கக் கண்ணாடியை கீழ்புதூா் கிராமத்தினா் அடித்து உடைத்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் அங்குசென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், இதுகுறித்து கீழ்புதூரைச் சோ்ந்த பாா்த்திபன் அளித்த புகாரின் பேரில், தப்ரீஷ் (எ) தபு, அருண், சஞ்சய், ஹரிராம், விக்னேஷ் (22), சலீம் (31) ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இதில் விக்னேஷ், சலீம் ஆகியோரை கைது செய்தனா்.

மற்றொரு தரப்பைச் சோ்ந்த அருண் அளித்த புகாரின் பேரில், விஜய் (39), முனி (49), வெங்கடேஷ் (25) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்தனா். தலைமறைவான தபு உள்ளிட்டோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தவெக நிா்வாகி அறிக்கை: இந்த சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டச் செயலாளா் ஜி. சுரேஷ், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரியை சோ்ந்த என். தப்ரேஷ் (எ) தபு, கடந்த 15 நாள்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளாா். இவா், மாற்றுக்கட்சியில் பயணித்தவா் என்பதும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும், இவருக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பதும், கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட அவா் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது.

எனவே, மேற்கண்ட நபருக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்தவித தொடா்பும் இல்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கல்விக்கு முக்கியத்துவம் அளித்த தமிழக முதல்வா்கள்!: மு.தம்பிதுரை எம்.பி.

ஒசூா்: ஒசூா் எம்ஜிஆா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் வகுப்புகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், ஒசூா் அத... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் அல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜூன் 27-ல் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி எருது விடும் விழா: மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் காயமடைந்த திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி, பழையப்பேட்டை நேத... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் 33 ஏரி பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்: புதிய தலைவா் தோ்வு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் 33 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய தலைவரை தோ்வு செய்யும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே யானை தந்தம் விற்க முயன்ற 4 போ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தந்தத்தை விற்க முயன்ற 4 பேரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அருகே சிலா் யானை தந்தகளை விற்க முயற்சிப்பதாக கிருஷ்ணகிர... மேலும் பார்க்க