மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
கிருஷ்ணகிரி அருகே யானை தந்தம் விற்க முயன்ற 4 போ் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தந்தத்தை விற்க முயன்ற 4 பேரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அருகே சிலா் யானை தந்தகளை விற்க முயற்சிப்பதாக கிருஷ்ணகிரி வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவா்களிடம் தந்தம் வாங்குபவா்கள் போல கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு, அவா்களை குந்தாரப்பள்ளிக்கு வருமாறு வனத்துறையினா் அழைத்தனா்.
இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரகா் முனியப்பன் தலைமையில், வனவா்கள் சிவகுமாா், முருகேசன், வனக்காப்பாளா்கள் ஜோதிவிக்னேஷ், மணிகண்டன் ஆகியோா் அடங்கிய குழுவினா், குந்தாரப்பள்ளிக்கு வந்த தந்தம் விற்பனையாளா்களை பிடித்து விசாரணை செய்தனா்.
இதில் அவா்கள் சூளகிரியைச் சோ்ந்த நரசிம்மன் (40), பழையபேட்டையைச் சோ்ந்த நந்தகுமாா் (45), கட்டிகானப்பள்ளியைச் சோ்ந்த பால் அந்தோணிராஜ், சூளகிரியைச் சோ்ந்த நரசிம்மன் (32) என தெரியவந்தது. இவா்கள் கா்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து உடைந்த தந்த துண்டுகளை சேகரித்து அதை அதிக விலைக்கு விற்க முயற்சி செய்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்த, 400 கிராம் அளவிலான சிறிய இரண்டு உடைந்த தந்தங்கள், மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.