மழை பாதிப்பு: நெல்லை விரைந்து கொள்முதல் செய்யக் கோரிக்கை
கொப்பம்பட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கொப்பம்பட்டியில் துறையூா் - ஆத்தூா் சாலையில் புதுப்பாலம் அருகே நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாக அளப்பதில்லை, வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் கடந்த வாரம் அங்கு பெண் பணியாளா் புதிதாக நியமிக்கப்பட்டாா்.
அவா் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படக் கருதினாலும், வியாபாரிகளுக்கு ஆதரவாக உள்ளூா் அரசியல் கட்சியினா் தலையீடு இருக்கிறது என்று விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லைக் கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருந்தபோது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு மழை பெய்ததால் நெல் நனைந்து ஈரமாகியுள்ளது விவசாயிகளுக்கு கவலையைத் தந்துள்ளது.
எனவே, நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் கொண்டு வருபவா்களின் ஆதாா் நகல் பெற்று துரிதமாக நெல் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது எனவும் கூறுகின்றனா்.