கலைவாணா் அரங்க வளாகத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: தமிழக அரசு அறிவிப்பு
புத்தாநத்தத்தில் 26-இல் மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் பகுதியில் வியாழக்கிழமை - ஜூன் 26 மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூன் 26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, டி.தம்மநாயக்கன்பட்டி, டி.கருப்பூா், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி மற்றும் மாங்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.