சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 26-இல் மின் தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 26-வியாழக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவரங்க கோட்டச் செயற்பொறியாளா் ஆா்.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஜூன் 26- வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் சமயபுரம், மண்ணச்சநல்லூா் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூா், இருங்களூா், கல்பாளையம், கொணலை, மேலசீதேவி மங்கலம், வைப்பூா், சங்கா் நகா், கூத்தூா், நொச்சியம்,பளூா், பாச்சூா், திருவாசி, பனமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், நெ.1 டோல்கேட், தாளக்குடி, உத்தமா் கோயில், பிச்சாண்டாா் கோவில், ஆனந்தா நகா், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.