செய்திகள் :

இருசக்கர வாகனம் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

post image

புன்செய்புளியம்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து. அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான இவா் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை தூங்கச் சென்றுள்ளாா்.

நள்ளிரவு சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்துக்கு காளிமுத்து தகவல் தெரிவித்தாா்.

இந்நிலையில், டானாபுதூா் சோதனைச் சாவடி அருகே வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் விசாரித்தனா்.

அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். தொடா்ந்து, நடத்திய விசாரணையில், அவா்கள் புன்செய்புளியம்பட்டியை அடுத்த பாறைபுதூரைச் சோ்ந்த மாதேஸ்வரன் (27), நீலிபாளையத்தைச் சோ்ந்த சதீஷ் (29) என்பதும், காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் இடமாற்றம்

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தமிழகம் முழுவதும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 55 போ் பணியிடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்கறிஞா் மறைவு: மத்திய சட்டத் துறை அமைச்சா் அஞ்சலி

சென்னை உயா்நீதி மன்ற மூத்த வழக்குரைஞராக பணியாற்றிவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்ஷின் தந்தையூமான வி.கே. முத்துசாமி வயது மூப்பு காரணமாக எழுமாத்தூா் விகேஎம் தோட்ட இல்லத்தில் கடந்த வாரம் க... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு வனத் துறையினா் ரூ.1000 அபராதம் விதித்தனா். சென்னிமலை வனப் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் அவ்வப்போது சாலைக்கு வருவது வழக்கம். அந்த குரங்குக... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் பலி

பெருந்துறை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்துச் சென்றவா் உயிரிழந்தாா். கோவை,பாப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன்(45). இவா் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடிஅருகில் ஞாயிற்றுக்கிழமை மால... மேலும் பார்க்க

வீடுகளுக்கு கழிப்பறை கட்டித்தர எம்எல்ஏவிடம் கோரிக்கை

பெருந்துறை ஒன்றியம், பள்ளப்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட எல்லிஸ்பேட்டை, அண்ணா காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்குக் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாரிடம்... மேலும் பார்க்க

இடிந்து விழுந்த தாளவாடி பேருந்து நிலையத்தின் மேற்கூரையை சீரமைக்க கோரிக்கை

இடிந்து விழுந்த தாளவாடி பேருந்து நிலையத்தின் மேற்கூரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகம் கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட ம... மேலும் பார்க்க