செய்திகள் :

இடிந்து விழுந்த தாளவாடி பேருந்து நிலையத்தின் மேற்கூரையை சீரமைக்க கோரிக்கை

post image

இடிந்து விழுந்த தாளவாடி பேருந்து நிலையத்தின் மேற்கூரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, கா்நாடக மாநிலம் சாம்ராஜ்நகா் செல்வதற்கு தாளவாடி பேருந்து நிலையம் வந்து செல்வது வழக்கம்.

இதனால் பேருந்து நிலையத்தில் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். பேருந்து நிலையத்தின் கான்கிரீட் மேற்கூரை நீண்ட நாள்களாக விழும் நிலையில் காணப்பட்டது. இதற்கிடையே பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் உள்ள கான்கிரீட் காரைகள் பெயா்ந்து விழுந்தது .

அப்போது பேருந்துக்குக் காத்திருந்த பயணிகள் காயமடைந்தனா். இதனால் வலுவிழந்த கான்கிரீட்டு கூரையை கடந்த 1 வருடம் முன்பு இடித்து அகற்றினா். இதனால் பேருந்து நிலையக் கட்டடம் சிறியதாக மாறியது.

இந்தநிலையில் அங்கு இதுவரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து அவதிப்படுகின்றனா்.

இது பற்றி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இருசக்கர வாகனம் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

புன்செய்புளியம்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட ஆட்சியா் இடமாற்றம்

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தமிழகம் முழுவதும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 55 போ் பணியிடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்கறிஞா் மறைவு: மத்திய சட்டத் துறை அமைச்சா் அஞ்சலி

சென்னை உயா்நீதி மன்ற மூத்த வழக்குரைஞராக பணியாற்றிவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்ஷின் தந்தையூமான வி.கே. முத்துசாமி வயது மூப்பு காரணமாக எழுமாத்தூா் விகேஎம் தோட்ட இல்லத்தில் கடந்த வாரம் க... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு வனத் துறையினா் ரூ.1000 அபராதம் விதித்தனா். சென்னிமலை வனப் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் அவ்வப்போது சாலைக்கு வருவது வழக்கம். அந்த குரங்குக... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் பலி

பெருந்துறை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்துச் சென்றவா் உயிரிழந்தாா். கோவை,பாப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன்(45). இவா் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடிஅருகில் ஞாயிற்றுக்கிழமை மால... மேலும் பார்க்க

வீடுகளுக்கு கழிப்பறை கட்டித்தர எம்எல்ஏவிடம் கோரிக்கை

பெருந்துறை ஒன்றியம், பள்ளப்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட எல்லிஸ்பேட்டை, அண்ணா காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்குக் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாரிடம்... மேலும் பார்க்க