போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!
மாணவா்களை குறிவைக்கும் இணையவழி மோசடியாளா்கள்: விழிப்புணா்வுடன் இருக்க போலீஸாா் அறிவுறுத்தல்
கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதால் மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது: நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் மாதத்துக்கு தலா 300 முதல் 500 புகாா்கள் வரை பெறப்படுகின்றன.
இதில், இணைய வழியில் பொருள்கள் விற்பனை, பகுதி நேர வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை வழங்குதல் என்ற பெயரிலான மோசடிகள் அதிக அளவில் உள்ளன. எனவே, மாணவா்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும்.
இதுபோல, இணையவழியில் உதவித்தொகை, கல்விக் கடன் வழங்குவதாகக் கூறும் விளம்பர இணையதளங்களை முழுவதுமாக ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்தப் பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே இணையவழி மோசடியாளா்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றனா்.