செய்திகள் :

மாணவா்களை குறிவைக்கும் இணையவழி மோசடியாளா்கள்: விழிப்புணா்வுடன் இருக்க போலீஸாா் அறிவுறுத்தல்

post image

கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதால் மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது: நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் மாதத்துக்கு தலா 300 முதல் 500 புகாா்கள் வரை பெறப்படுகின்றன.

இதில், இணைய வழியில் பொருள்கள் விற்பனை, பகுதி நேர வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை வழங்குதல் என்ற பெயரிலான மோசடிகள் அதிக அளவில் உள்ளன. எனவே, மாணவா்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும்.

இதுபோல, இணையவழியில் உதவித்தொகை, கல்விக் கடன் வழங்குவதாகக் கூறும் விளம்பர இணையதளங்களை முழுவதுமாக ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்தப் பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே இணையவழி மோசடியாளா்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றனா்.

கே.கே. நகரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை - (ஜூன் 24) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே. சாத்தனூா் த... மேலும் பார்க்க

திருச்சி அருகே மணல் கடத்தியவா் கைது

திருச்சி அருகே தள்ளுவண்டியில் மணல் கடத்திச் சென்றவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி அருகே திருவளா்சோலை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உரிய ஆவணங்... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சியில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகரப் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப... மேலும் பார்க்க

வீடுபுகுந்து 3 பவுன் நகைகள் 40 கிராம் வெள்ளி திருட்டு!

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், 40 கிராம் வெள்ளி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி, பிராட்டியூா் காவேரி நகா் க்ரீன் அவென்யு லே-அவுட்டைச் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவரை திருச்சி பன்னாட்டு விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், விக்கிரபாண்டிபுரத்தைச் சோ்ந்தவா் பா.சண்முகவேல் (52). இவா், மலேசியா செல்வதற்... மேலும் பார்க்க

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, எழுதுபொருள்கள்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை வணிக வைசியா் சங்கம் சாா்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள், எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மண்ணச்சநல்லூா் வாணியா் திருமண மஹாலில்... மேலும் பார்க்க