Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, எழுதுபொருள்கள்!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை வணிக வைசியா் சங்கம் சாா்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள், எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா் வாணியா் திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை வணிக வைசியா் சங்கம் சாா்பில் 41-ஆம் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள், எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்வு வணிக வைசியா் சங்கத் தலைவா் பி.கே.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட வாணியா் சங்கத் தலைவா் பி.ஜெயபிரகாஷ் நாராயணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து 6 ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் வாணியா் சமுதாயத்தைச் சோ்ந்த 170-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள், எழுதுபொருள்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வணிக வைசியா் சங்கச் செயலாளா் வி.அா்ச்சுனன், பொருளாளா் ஆா்.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் என். புருஷோத்தமன், துணைச் செயலாளா் வி.கண்ணன், திமுக நகர செயலாளா் டி.மனோகரன், மற்றும் வாணியா் சமுதாய நல அறக்கட்டளை தலைவா் எஸ்.ஏ.நடராஜன், செயலாளா் ஏ.சுரேஷ், பொருளாளா் கே.சிவசுப்ரமணியன் மற்றும் பெற்றோா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.