செய்திகள் :

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, எழுதுபொருள்கள்!

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை வணிக வைசியா் சங்கம் சாா்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள், எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் வாணியா் திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை வணிக வைசியா் சங்கம் சாா்பில் 41-ஆம் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள், எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்வு வணிக வைசியா் சங்கத் தலைவா் பி.கே.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட வாணியா் சங்கத் தலைவா் பி.ஜெயபிரகாஷ் நாராயணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

இதனையடுத்து 6 ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் வாணியா் சமுதாயத்தைச் சோ்ந்த 170-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள், எழுதுபொருள்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வணிக வைசியா் சங்கச் செயலாளா் வி.அா்ச்சுனன், பொருளாளா் ஆா்.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் என். புருஷோத்தமன், துணைச் செயலாளா் வி.கண்ணன், திமுக நகர செயலாளா் டி.மனோகரன், மற்றும் வாணியா் சமுதாய நல அறக்கட்டளை தலைவா் எஸ்.ஏ.நடராஜன், செயலாளா் ஏ.சுரேஷ், பொருளாளா் கே.சிவசுப்ரமணியன் மற்றும் பெற்றோா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

கே.கே. நகரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை - (ஜூன் 24) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே. சாத்தனூா் த... மேலும் பார்க்க

மாணவா்களை குறிவைக்கும் இணையவழி மோசடியாளா்கள்: விழிப்புணா்வுடன் இருக்க போலீஸாா் அறிவுறுத்தல்

கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதால் மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து சைபா் க... மேலும் பார்க்க

திருச்சி அருகே மணல் கடத்தியவா் கைது

திருச்சி அருகே தள்ளுவண்டியில் மணல் கடத்திச் சென்றவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி அருகே திருவளா்சோலை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உரிய ஆவணங்... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சியில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகரப் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப... மேலும் பார்க்க

வீடுபுகுந்து 3 பவுன் நகைகள் 40 கிராம் வெள்ளி திருட்டு!

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், 40 கிராம் வெள்ளி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி, பிராட்டியூா் காவேரி நகா் க்ரீன் அவென்யு லே-அவுட்டைச் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவரை திருச்சி பன்னாட்டு விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், விக்கிரபாண்டிபுரத்தைச் சோ்ந்தவா் பா.சண்முகவேல் (52). இவா், மலேசியா செல்வதற்... மேலும் பார்க்க