`தொடர் மணல் கடத்தல்' - 5 லாரிகள் பறிமுதல், 6 பேர் கைது! - கரூரில் நடந்தது என்ன?
போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது
போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவரை திருச்சி பன்னாட்டு விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், விக்கிரபாண்டிபுரத்தைச் சோ்ந்தவா் பா.சண்முகவேல் (52). இவா், மலேசியா செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்துள்ளாா். அப்போது, விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், அவா் சமா்ப்பித்த ஆவணங்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, விமான நிலைய அலுவலா்கள் அவரைப் பிடித்து திருச்சி பன்னாட்டு விமான நிலையப் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.