செய்திகள் :

வேறு சமூகத்தவரை திருமணம் செய்த பெண்; 40 பேர் மொட்டையடித்து `சடங்கு' செய்த கிராமம்!

post image

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், வேறு சமூக ஆணை திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆண்கள் மொட்டையடித்து தீட்டு கழித்திருக்கின்றனர். இது தொடர்பாக வெளியான வீடியோவில், ஆண்கள் கூட்டம் மொட்டையடித்து அமர்ந்திருக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வெளியான செய்தியில், ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில், 'குடும்ப்' இனத்தைச் சேர்ந்த பழங்குடி சமூகப் பெண் ஒருவர், பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்திருக்கிறார். இந்த விவகாரம் கிராமத்தில் ஊர் தலைவர் முன் விசாரணைக்கு வந்திருக்கிறது.

திருமணம்
திருமணம்

அப்போது இதுபோன்ற செயலால் குற்றம் நடந்துவிட்டதாகவும், அந்தப் பெண்ணின் குடும்பத்தின் ஆண்கள் மொட்டையடித்து குலதெய்வத்துக்கு ஆடு, கோழி, பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளை பலி கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்தான் இந்த மொட்டையடிக்கும் சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ராயகடா பழங்குடி சமூகம் பாரம்பரியமாக வெவ்வேறு சமூகங்களுக்கு இடையிலான திருமணங்களைத் தடை செய்கிறது. பாரம்பரிய நடைமுறைகளை கடைபிடிக்கத் தவறினால், அந்தக் குடும்பம் சமூக விலக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் 40 பேரும் 'எங்கள் விருப்பபடிதான் மொட்டையடித்துக்கொண்டோம்' எனத் தெரிவித்திருக்கின்றனர்.

'ஒரு நாள் கோடீஸ்வரி' - 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதி... மேலும் பார்க்க

`ஸ்கூட்டி ரூ. 1 லட்சம், நம்பர் ரூ. 14 லட்சம்' - ஏலத்தில் போட்டிபோட்டு வாங்கிய இமாச்சல் நபர்

இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் ரூ. 1 லட்சத்துக்கு ஸ்கூட்டி வாங்கி, அதற்கு போக்குவரத்துத் துறையில் ரூ. 14 லட்சத்துக்கு விஐபி நம்பர் வாங்கியது பேசுபொருளாகியிருக்கிறது.இதில், சோலன் மாவட்டதிலுள்ள பட்டியைச் ... மேலும் பார்க்க

ஒரே சமயத்தில் தேர்வெழுதிய தந்தை, மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு.. ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு!

படிப்புக்கும், வேலைக்கும் வயது ஒரு தடை கிடையாது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் சிங்(41).... மேலும் பார்க்க

ஹைதராபாத் மேம்பாலத்தில் ஓட்டமெடுத்த ஒட்டகம்; சவாரியில் சிக்கிய இளைஞரை மீட்ட சம்பவம்.. வைரல் காட்சி!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான மேம்பாலத்தில், ஒருவர் ஒட்டகத்தின் மீது ஆபத்தான முறையில் சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தின் பி.வி. நரசிம்மராவ் விரைவுச் சாலையில் இந்த சம்பவம் நடந... மேலும் பார்க்க

``திருமணத்திற்கு வராத விருந்தினர்களுக்கு ரூ.4,339 அபராதம்'' - மணமகள் சொல்வது என்ன? வைரலாகும் பதிவு

திருமணம் என்றாலே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கேட்டரிங் முதல் டெக்கரேஷன் வரை திருமண நிகழ்விற்காக ஒரு பெரிய தொகையை செலவிடுவார்கள்.குறிப்பாக விருந்தினர்களின் எண்ணிக்கை பொறுத்து உணவுகள் ஏற்பாடு செ... மேலும் பார்க்க

Telegram: ``நான் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா'' - டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரெஞ்சு பத்திரிகையான லு பாயிண்டி செய்தியிடம் அளித்த பேட்டியி... மேலும் பார்க்க