மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி: சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்...
ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி உயிரிழந்த தொண்டர் - என்னென்ன பிரிவுகளில் வழக்கு?
கடந்த ஜூன் 18-ம் தேதி, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரெண்டபல்லா எனும் கிராமத்திற்கு சென்றிருக்கிறார்.
ஒரு ஆண்டிற்கு முன்பு, தற்கொலை செய்துகொண்ட தன் கட்சி தலைவர் ஒருவரின் குடும்பத்தை சந்திக்கத் இந்தப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரெண்டபல்லா கிராமத்திற்கு ஜெகன் மோகன் சென்ற வழியான எதுக்குரு பைபாஸ் முழுவதும் இவருக்கு மிகுந்த வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது ஜெகன் மோகன் கான்வாயின் மீது பூத்தூவ முயன்ற சிங்கையா (வயது 55) நெரிசலில் இவரது காரின் டயரில் சிக்கி உயரிழந்துள்ளார். இந்த வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து குண்டூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் (SP) எஸ் சதீஷ் குமார் கூறுவதாவது...
"சிங்கையாவிற்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கு உயிரிழந்தவரின் மனைவி சீலி லுர்து மேரி கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள், டிரோன் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்தப் பின்னர், இந்த உயிரிழப்பு ஜெகன் மோகன் ரெட்டி காரினால் ஏற்பட்டது தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு, ஜெகன் மோகன் ரெட்டி, அவரது டிரைவர் ரமணா ரெட்டி உள்ளிட்ட 6 பேரின் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின், பிரிவு 105 (உயிரிழப்பை ஏற்படுத்துதால் ஆனால் கொலை அல்ல) மற்றும் பிரிவு 49 (சம்பவத்திற்கு உதவும் அல்லது ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கை' கீழ் புகார் பதியப்பட்டுள்ளது".