செய்திகள் :

``அரசு கண்டுகொள்ளாதது வேதனை..'' - பதக்கங்களுடன் கரும்புச்சாறு விற்கும் தேசிய தடகள வீரர்

post image

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஃபாசில்கா நகரிலிருக்கும் சபுவானா கிராமத்தில் வசித்து வருகிறார் தேசிய தடகள வீரர் தீபக். நிதி பற்றாக்குறையாலும் அரசாங்க ஆதரவில்லாமலும் தவித்து வரும் விளையாட்டு வீரர் தீபக், தனது அன்றாட வாழ்வாதாரத்திற்கான பணம் சேர்க்க தெருக்களில் கரும்புச்சாறு விற்று வாழும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

22 வயதான தேசிய தடகள வீரர் தீபக், தனது கரும்புச்சாறு விற்கும் வண்டியை அலங்கரிக்க மாநில அளவிலான தடகள போட்டிகளில் தான் பங்கேற்று  வென்ற 16 பதக்கங்களை பயன்படுத்தி அலங்கரித்து வைத்துள்ளார். அந்த வண்டியில்தான் தனது வாழ்வாதாரத்திற்காக தெருக்களில் கரும்புச்சாறு விற்பனை செய்து வருகிறார்.

வேலை வாயப்பின்மை
வேலை வாயப்பின்மை

தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி பேசிய அவர், ``விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த நான், அரசு உத்தியோகம் நாடி அத்தனை முயற்சியும் செய்து பார்த்தேன். என்னால் எந்த முயற்சியிலும் வெற்றி பெற இயலவில்லை. என் மனதில் முன்பு இருந்த பொறுமை தற்போது இல்லாமல் போய்விட்டது. விளையாட்டு வீரர்களுக்கு மரியாதைக்குரிய உத்தியோகம் வழங்குவதில் அரசாங்கத்தின் கொள்கைகள் தோல்வியை சந்தித்துவிட்டது என்பதை அம்பலப்படுத்ததான் என் கரும்புச்சாறு வண்டியை இவ்வாறு எனது பதக்கங்களால் அலங்கரித்து வைத்துள்ளேன்" என்றார்.

தனது மகன் தீபக் பற்றி பேசிய அவரது தந்தை சரஞ்சித், ``நான் என் மகனை சிறப்பாக ஊக்குவித்துள்ளேன். பல விளையாட்டு போட்டிகளில் அவர் பங்கேற்று வெற்றி பெற அத்தனை ஊக்கமும் கொடுத்துள்ளேன். ஆனால், என் மகனுக்கென ஒரு உத்தியோகம் வழங்கக்கூட அரசாங்கம் சிறிதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மனதுக்கு மிகுந்த ஏமாற்றம் தருகிறது. நான் நோய்வாய்ப்பட்டு இருப்பதால், எங்கள் குடும்ப செலவிற்காக தீபக்தான் ஏதாவது செய்து உழைக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது.

தீபக் குமார்
தீபக் குமார்

என் மகன் தீபக், விளையாட்டு துறையில் பல சாதனைகளை சாத்தியமாக்கியவர். மார்ச் 2022-ல் நாகாலாந்தில் நடைபெற்ற 56-வது தேசிய கிராஸ் கண்ட்ரி தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட என் மகன், 20 வயதுக்குட்பட்ட சிறுவருக்கான 8 கிமீ ஓட்டப்பந்தயத்தில் ஓடி இரண்டாம் இடம்பிடித்தார். ஜூன் 2023-ல் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற 66-வது தேசிய பள்ளி தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 6 கி.மீ கிராஸ் கண்ட்ரி ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் பரிசை வென்றார். 'பஞ்சாப் தடகள சங்கம்' நடத்திய மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தீபக் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

2022-ல் சங்ரூரில் நடைபெற்ற 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றியை தன் வசமாக்கினார். மேலும், 2024-ல் சங்ரூரில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான  8 கிமீ ஓட்டப்பந்தயம், 2022-ல் சங்ரூரில் நடைபெற்ற 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 2021-ல் மொஹாலியில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 6 கிமீ கிராஸ் கண்ட்ரி ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் பங்கேற்று தீபக் முதலிடம் பிடித்து வெற்றியை தனதாக்கி உள்ளார்.

மெடல்

இவ்வளவு திறமைகள் மிகுந்த எனது மகன் மீதான என்னுடைய நம்பிக்கையை இப்போதும் நான் இழக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் விளையாட்டு கலாச்சாரத்தை மீட்டெடுக்க முதல்வர் பகவந்த் மான் சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆனால், எங்களுக்கு மாநில அரசிடமிருந்து இன்னும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. அப்படி முதல்வரின் உதவி கிடைத்தால், என் மகன் 'தீபக்' கரும்புச்சாறு விற்க வேண்டிய கட்டாயம் இருக்காது" என அவர் மனதின் குரலை தெரிவித்தார்.

மும்பை: ``நிறுத்துங்க, நான் ஏறணும்..'' - விமானத்தை நோக்கி ஓடிய பயணி, சுற்றி வளைத்த அதிகாரிகள்

விமான பயணத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே செல்லவேண்டும் என்று சொல்வார்கள். பஸ், ரயில் போன்று விமான பயணத்திற்கு தாமதமாக செல்ல முடியாது. ஒருமுறை கேட் மூடப்பட்டுவிட்டால் அதன் பிறகு விமானத்தில் பயணிக... மேலும் பார்க்க

Samantha: ``ஐயோ, மீண்டும் வந்துவிட்டதா?" - வைரலான மார்க் சீட்; சமந்தாவின் `கியூட்' ரியாக்ஷன்!

நடிகை சமந்தா முதன்முறையாக தயாரித்த ’சுபம்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அதே நேரம் சமந்தா பள்ளி காலத்தில் பெற்ற பாராட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குடும்ப சிக்க... மேலும் பார்க்க

வேறு சமூகத்தவரை திருமணம் செய்த பெண்; 40 பேர் மொட்டையடித்து `சடங்கு' செய்த கிராமம்!

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், வேறு சமூக ஆணை திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆண்கள் மொட்டையடித்து தீட்டு கழித்திருக்கின்ற... மேலும் பார்க்க

'ஒரு நாள் கோடீஸ்வரி' - 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதி... மேலும் பார்க்க

`ஸ்கூட்டி ரூ. 1 லட்சம், நம்பர் ரூ. 14 லட்சம்' - ஏலத்தில் போட்டிபோட்டு வாங்கிய இமாச்சல் நபர்

இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் ரூ. 1 லட்சத்துக்கு ஸ்கூட்டி வாங்கி, அதற்கு போக்குவரத்துத் துறையில் ரூ. 14 லட்சத்துக்கு விஐபி நம்பர் வாங்கியது பேசுபொருளாகியிருக்கிறது.இதில், சோலன் மாவட்டதிலுள்ள பட்டியைச் ... மேலும் பார்க்க

ஒரே சமயத்தில் தேர்வெழுதிய தந்தை, மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு.. ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு!

படிப்புக்கும், வேலைக்கும் வயது ஒரு தடை கிடையாது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் சிங்(41).... மேலும் பார்க்க