செய்திகள் :

மும்பை: ``நிறுத்துங்க, நான் ஏறணும்..'' - விமானத்தை நோக்கி ஓடிய பயணி, சுற்றி வளைத்த அதிகாரிகள்

post image

விமான பயணத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே செல்லவேண்டும் என்று சொல்வார்கள். பஸ், ரயில் போன்று விமான பயணத்திற்கு தாமதமாக செல்ல முடியாது. ஒருமுறை கேட் மூடப்பட்டுவிட்டால் அதன் பிறகு விமானத்தில் பயணிகளை அனுமதிக்க மாட்டார்கள்.

மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவர் தாமதமாக வந்துவிட்டு விமானத்தை தவறவிட்டுவிட்டார். மும்பை கலம்பொலியை சேர்ந்த பியூஸ் சோனி(25) என்ற அந்த பயணி பாட்னா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அவர் வருவதற்கு முன்பே விமானம் புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.

அவர் விமான நிலையத்திற்குள் செல்லும் நுழைவு வாயிலுக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் விமானம் கிளம்பி விட்டது என்று சொன்னார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த சோனி என்ன செய்வது என்று தெரியாமல் கேட் நம்பர் 42 மற்றும் 43-க்கு இடையில் இருந்த வழி வழியாக விமான நிலைய ஓடுபாதைக்குள் சென்றுவிட்டார்.

அவர் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு விமானத்தை நோக்கி ஓடினார். தான் செல்ல வேண்டிய விமானம் அதுதான் என்று நினைத்து அதில் ஓடிச்சென்று ஏறிவிடலாம் என நினைத்து விமானத்தை நோக்கி ஓடினார்.

ஓடுதளத்தில் மர்ம நபர் ஒருவர் ஓடுவதை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உடனே அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, "தான் தாமதமாக வந்ததால் கேட் மூடப்பட்டுவிட்டதாகவும், எனவே அவசர வழியை திறந்து உள்ளே ஓடி வந்ததாக குறிப்பிட்டார்.

அவர் ஓடுபாதையில் ஓடும்போது ஏதாவது விமானம் கிளம்பியிருந்தால் அவர் மீது மோதி அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்று எச்சரித்த அதிகாரிகள், இச்சம்பவத்தால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, அவரை போலீஸில் ஒப்படைத்தனர். போலீசார், அவர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

``அரசு கண்டுகொள்ளாதது வேதனை..'' - பதக்கங்களுடன் கரும்புச்சாறு விற்கும் தேசிய தடகள வீரர்

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஃபாசில்கா நகரிலிருக்கும் சபுவானா கிராமத்தில் வசித்து வருகிறார் தேசிய தடகள வீரர் தீபக். நிதி பற்றாக்குறையாலும் அரசாங்க ஆதரவில்லாமலும் தவித்து வரும் விளையாட்டு வீரர் தீபக், தனது அ... மேலும் பார்க்க

Samantha: ``ஐயோ, மீண்டும் வந்துவிட்டதா?" - வைரலான மார்க் சீட்; சமந்தாவின் `கியூட்' ரியாக்ஷன்!

நடிகை சமந்தா முதன்முறையாக தயாரித்த ’சுபம்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அதே நேரம் சமந்தா பள்ளி காலத்தில் பெற்ற பாராட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குடும்ப சிக்க... மேலும் பார்க்க

வேறு சமூகத்தவரை திருமணம் செய்த பெண்; 40 பேர் மொட்டையடித்து `சடங்கு' செய்த கிராமம்!

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், வேறு சமூக ஆணை திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆண்கள் மொட்டையடித்து தீட்டு கழித்திருக்கின்ற... மேலும் பார்க்க

'ஒரு நாள் கோடீஸ்வரி' - 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதி... மேலும் பார்க்க

`ஸ்கூட்டி ரூ. 1 லட்சம், நம்பர் ரூ. 14 லட்சம்' - ஏலத்தில் போட்டிபோட்டு வாங்கிய இமாச்சல் நபர்

இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் ரூ. 1 லட்சத்துக்கு ஸ்கூட்டி வாங்கி, அதற்கு போக்குவரத்துத் துறையில் ரூ. 14 லட்சத்துக்கு விஐபி நம்பர் வாங்கியது பேசுபொருளாகியிருக்கிறது.இதில், சோலன் மாவட்டதிலுள்ள பட்டியைச் ... மேலும் பார்க்க

ஒரே சமயத்தில் தேர்வெழுதிய தந்தை, மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு.. ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு!

படிப்புக்கும், வேலைக்கும் வயது ஒரு தடை கிடையாது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் சிங்(41).... மேலும் பார்க்க